ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு
ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப் என நடிகர் மோகன்லால் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப் என நடிகர் மோகன்லால் வெளிப்படை பேசியுள்ளார்.
ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களைப் படிக்கிறதுக்குக் காரணம் என்ன?
படம் நடிக்கிறது மட்டும் இல்லையே வாழ்க்கை. வேறு சில விஷயங்களும் நமக்குத் தேவை. நமக்கு நிறைய கேள்விகள் மனதிற்குள் இருக்கும். யாராவது ஒருத்தவங்க பதில் சொன்னால், நாம் அவருக்கு ரசிகர் ஆகிவிடுவோம். அவருடைய ஒரு புக் ஆக இருக்கலாம். ஒருத்தருடைய பேச்சில் புத்தகத்தில் தேவையான பதில் நமக்குக் கிடைக்கும்போது, ஓ மை காட் என இருக்கும். ஒரு பிரச்னை இருக்கும்போது சாயி பாபாவின் மெசேஜ் நமக்கு வரும்போது, ஸ்பிரிச்சவலைத் தாண்டி எமோஷனலான பாண்டிங் ஆக அது இருக்கும்.
என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், சூப்பர் இயற்கை சக்தி எனக்கு நடிப்பதில் உதவியாக இருக்கு. என்னுடைய தினசரி வாழ்க்கை மற்றும் எப்படி நடக்கனும் என்பது அந்த சக்தி வழிநடத்துறதாகத்தான் நான் நினைக்கிறேன்.
