Manohar: ரதி நிர்வேதம் பார்த்து ஆசீர்வதித்த சிவாஜி சார்.. அப்பாவின் மறைவுக்கு பின் வந்த விருது.. நடிகர் மனோகர் பேட்டி
Manohar: ரதி நிர்வேதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகர் மனோகர் அவர்களின் பேட்டியைக் காணலாம்.

Manohar: தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகர் மனோகர். அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான மனோகருக்கு, நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது.
பிரேம் நசீர், மம்முட்டி, மோகன் லால், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கும் நடிகர் மனோகர் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு, ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி குறித்து பார்ப்போம். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
வணக்கம். இன்றைக்கும் அழியாத கோலங்கள் மனோகர் இவர் தான் என அடையாளம் கண்டுகொள்கிறார்களா?
ஆமாங்க சார். அடையாளம் கண்டுபிடிச்சிடுறாங்க. நான் பஸ், ஆட்டோ, காரில் போகும்போது, சில பேர் என்னிடம் நீங்கள்தான் மனோகரா எனக் கேட்பார்கள். அப்போது, அது நான் இல்லைன்னு சொல்லிட்டுப் போவேன். அது நல்லதுக்கு கேட்குறாங்களா கெட்டதுக்கு கேட்குறாங்களான்னு தெரியல. சரியான வாய்ப்பு இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு இப்படி பதில் சொல்லிடுறது. அழியாத கோலங்கள் படத்தைக் காட்டிலும், நெஞ்சத்தைக் கிள்ளாதே கீச்சு, தானே நீங்க என பலர் கேட்பாங்க. சிரித்தால் அடையாளம் கண்டுபிடிச்சிடுறாங்க சார்.
நீங்கள் சினிமாவுக்கு வர காரணமாக அமைந்தது என்ன?
காரணம் என சொல்லமுடியாது. குஞ்சன் அப்படிங்கிற மலையாள நடிகர் தான். இப்பவும் அவர் நடிச்சிட்டு இருக்கார். சென்னை நுங்கம்பாக்கம் ஹைரோடில், பார்க் எதிர்க்க எங்க கடை இருக்கும். மலையாள இயக்குநர்கள் பலர் எங்க கடையில் மெடிசின் வாங்குவாங்க. நான் ஸ்கூல் படிச்சிட்டு, கடை வழியாக தான் வருவேன். என்னைப் பலர் பார்த்திருக்காங்க. பரதன் சார், எங்கப்பாகிட்ட 1977ல் இருந்து என்னை நடிக்க வைக்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. அது எனக்கு அப்போது தெரியாது. ஒரு தெரு முக்கில் வைச்சு நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. அப்படி தான் நடிக்க வைச்சாங்க. ஹரிபோத்தன் சார் - பரதன் சார் இவங்க இரண்டு பேரும் தான் அதற்கும் காரணம். அந்த படம் ‘ரதி நிர்வேதம்’.
ரதி நிர்வேதம் படத்தில் முதன்முறையாக நடித்தது எப்படி இருந்தது? அதுவும் அது பரபரப்பான படம்?
கேரளாவின், நெல்லியம்பதி என்னும் இடத்தில் காலை 9 மணிமுதல் 6 மணி வரை தான் சூட்டிங். அப்போது கரண்ட் எல்லாம் பெரும்பாலான இடங்களில் கிடையாது. நாங்கள் தங்கியிருக்கிற இடத்தில் கட்டிலின் உயரம் மட்டுமே ரொம்ப அதிகம். ஏனென்றால், வனவிலங்குகளால் நமக்கு பாதிப்பு வரக்கூடாமல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்திருந்தாங்க. அப்போது பெரிய நடிகர்கள் முன், நடிக்க பயமாக இருந்ததும் அழுதுட்டேன். அப்போது பரதன் சார், நான் சொல்றதை செய்தால் போதும் என பொறுமையாக சொல்வார். அப்படி தட்டிக்கெடுத்து வேலைவாங்கிட்டாங்க. அந்தப் படத்தைப் பொறுத்தவரை நல்லதும் இருக்கு. வருத்தமும் இருக்கு. 1979ல் எனது அப்பா இறந்திட்டாங்க. அப்பா இறந்து 15 நாட்களில் கேரள அரசின் மாநில விருது அறிவிக்கிறாங்க. அப்போது அப்பா இருந்திருந்தால் சந்தோஷம்பட்டிருப்பார்.
மேலும் படிக்க: சிவாஜி நடித்த முக்கிய படம்
மேலும் படிக்க: மோகன் பாபு தமிழில் நடிக்க காரணமாக இருந்த சிவாஜி சார்
மேலும் படிக்க: சிவாஜியின் மரணத்தின்போது நடந்த சம்பவம்
ரதி நிர்வேதம் படத்தினை சிவாஜி சார் பார்த்தாரா?
ஆமாங்க சார். அது மறக்கமுடியாது. ஃபிலிம் சேம்பரில் அவருக்காக இரவு காட்சி போட்டாங்க. வள்ளுவர் கோட்டத்துக்கு எதிர்க்க தான் எங்க வீடு. எங்க வீட்டில் இருந்து நானும் எங்க தாத்தாவும் அங்க போயிருந்தோம். லைட் போட்டு எங்களுக்குப் பின்னாடி பார்த்தால், சிவாஜி சார் மற்றும் கமலாம்மாள் உட்கார்ந்து படம் பார்த்திருக்காங்க. என்னை பார்த்ததும் ஆசீர்வாத பண்ணுனார். தம்பதிகளை அன்னிக்கி அவங்களிடம் ஆசி வாங்கியது மறக்கவே முடியாது வாழ்க்கையில். அந்த அடிப்படையை வைச்சு, பிரபு சார் என்னை சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு கிண்டல் பண்ணுனார். சிவாஜி சார் தான், எனக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். 1984ல் புயலில் எங்கள் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பில் நடிகர் சங்க அட்டை காணாமல் போய்விட்டது.
இடையில் அதை மீட்க முயற்சி செய்தேன். நடிகர் சங்கம் போய் விசாரிக்கும்போது, நடிகர் சங்க அட்டை புதியதாக தருவது இல்லை என சொல்லிட்டாங்க சார். நானும் அப்படியே விட்டுட்டேன்’’ என பேசியிருந்தார், நடிகர் மனோகர்.
நன்றி:டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்