'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்
‘ பள்ளி வந்து சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு எதிர்ப்புறம், புனித பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் என்கிற ஸ்கூல் இருக்கும். அங்கு தான், 10ஆம் வகுப்பு வரை படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 சாந்தோமில் படிச்சேன்' என நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்
தான் சென்னையில் தான் படித்தேன் என்றும், டிவியில் பார்த்த படங்கள் தான் சினிமாவுக்கான திறவுகோலாக இருந்தது என நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக நடிகர் மணிகண்டன் ஜே.எஃப்.டபிள்யூ பின்ஜ் யூடியூப் சேனலுக்கு, அனு ஹாசன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்து இருந்தார். இந்தப் பேட்டி பிப்ரவரி 28ஆம் வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம். அவையாவன:
‘’எழுத்தாளர், இயக்குநர், நடிகர், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்னு நிறைய பண்ணியிருக்கீங்க. நடிகர் மணிகண்டன் ஒரு பன்முகத் திறமைமிக்க கலைஞர்?அவருடைய பள்ளி வாழ்க்கை எங்கு இருந்தது?