ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு இடையிலான பிரச்சனையில், நடிகர் கூல் சுரேஷை இழுத்து பலரும் திட்டி வருவதாகவும், பிறர் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் எனவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..
கோலிவுட்டில் தற்போது நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியின் பெயர் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இவர்கள் இருவரது விவாகரத்து வழக்கும், ரவி மோகன் பாடகியும் தோழியுமான கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பேசுபொருளாக மாறியது. பின், மாறி மாறி அறிக்கைகளும் சமூக வலைதள பதிவுகளும் வெளியாகி பிரச்சனையை பெரிதுபடுத்தின.
இந்த நிலையில், ரவி மோகன் குடும்ப பஞ்சாயத்தில் தன் தலை உருட்டப்படுவதாக நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். இவர்களது பிரச்சனையில் தேவையில்லாமல் தன்னை இழுத்து அசிங்கமாக திட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
