Actor Karthi: உழவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.. எல்லா நேரங்களிலும் பங்களிப்பு தாருங்கள் - கார்த்தி பேச்சு
Actor Karthi: விவசாயத்தில் பல்வேறு விதமான சாதனைகள் புரியும் விவசாயிகளும், விவசாயத்துக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் கார்த்தியின் உழவன் பவுன்டேஷன் சார்பில் விருதுகளும், ரூ. 2 லட்சம் பணத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுதோறும் விவசாயத்தில் பல்வேறு விதமான சாதனைகள் புரியும் விவசாயிகளும், விவசாயத்துக்கு பங்களிப்பு செய்பவர்களும் கெளரவப்படுத்தப்படுகிறார்கள்.
இதையடுத்து உழவன் விருதுகள் 2025 விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
உழவர்கள் தான் கொண்டாடப்பட வேண்டியவர்கள்
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது, "இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை, குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.