‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்
கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரின் 40 ஆண்டு கால சினிமா பயணத்திறக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார். அதில் ஷிவாண்ணா என் மகன் போன்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ் குமாரின் மூத்த மகன் சிவ ராஜ்குமார். இவர், தந்தையை போலவே சினிமாவில் புகழ் ஈட்டியவர்.
கன்னடத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 125 படங்களுக்கும் மேல் நடித்து கன்னட மக்களின் ஹேட்ரிக் ஹீரோவாக மாறியுள்ளார். இவரது நடிப்பு, நடனத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை எப்போதும் அன்புடன் ஷிவாண்ணா என்றே அழைத்து வருகின்றனர்.