‘என்னாம்மா வொர்க் அவுட் பண்றார்.. அவருக்கு வயசு 73 இல்ல 37’ -மேடையில் முதல்வரை புகழ்ந்த ஜீவா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘என்னாம்மா வொர்க் அவுட் பண்றார்.. அவருக்கு வயசு 73 இல்ல 37’ -மேடையில் முதல்வரை புகழ்ந்த ஜீவா!

‘என்னாம்மா வொர்க் அவுட் பண்றார்.. அவருக்கு வயசு 73 இல்ல 37’ -மேடையில் முதல்வரை புகழ்ந்த ஜீவா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 22, 2025 11:49 AM IST

என்னுடைய அப்பா காலையில் எழுந்தால், சிறிது நேரம் உடற்பயிற்சி செய் என்று தொடர்ந்து அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார். இப்போது கூட அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் மு க ஸ்டாலின் ஐயா உடற்பயிற்சி செய்வதை நான் செய்திகளில் பார்த்து இருக்கிறேன். - நடிகர் ஜீவா பேச்சு!

‘என்னாம்மா வொர்க் அவுட் பண்றார்.. அவருக்கு வயசு 73 இல்ல 37’ -மேடையில் முதல்வரை புகழ்ந்த ஜீவா!
‘என்னாம்மா வொர்க் அவுட் பண்றார்.. அவருக்கு வயசு 73 இல்ல 37’ -மேடையில் முதல்வரை புகழ்ந்த ஜீவா!

என்னுடைய வாழ்த்துகள்

நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது, ‘முதல்வர் மு க ஸ்டாலின் ஐயாவை வாழ்த்துமளவுக்கு எனக்கு வயது பத்தாது. தொடர்ந்து இந்த விழாவை 78 நாட்களாக செய்து வருகிறார்கள். அதற்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் மு க ஸ்டாலின் ஐயாவிற்கு வயதை திருப்பி தான் போட வேண்டும்; ஆம், அவருக்கு தற்போது 73; அதை அப்படியே திருப்பி போட்டால் 37.

உண்மையில் அதுதான் அவருடைய வயது என்பது போலத்தான் அவர் இருக்கிறார். என்னுடைய அப்பா காலையில் எழுந்தால், சிறிது நேரம் உடற்பயிற்சி செய் என்று தொடர்ந்து அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார். இப்போது கூட அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் மு க ஸ்டாலின் ஐயா உடற்பயிற்சி செய்வதை நான் செய்திகளில் பார்த்து இருக்கிறேன்.

உத்வேகம் கிடைக்கிறது

அவர் திடீரென்று சைக்கிளிங் செல்வார்; ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வார். அதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே நமக்கு உத்வேகம் கிடைக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளில் மேலும் மேலும் கலந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.