‘படுத்த படுக்கையான தனுஷ்.. ஸ்ருதி ஹாசனை அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன டைரக்டர்..’ பற்ற வைக்கும் பயில்வான்
அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் தனுஷ் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா கிசுகிசுக்களை பேசுவதை தன் வழக்கமாக வைத்துள்ளார். இவரது பேச்சுகள் எப்போதும் சினிமா பிரபலங்களை பரபரப்பிலேயே வைத்திருக்கிறது.
படத்தில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்
இந்நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு சினிமா நடிகர்கள் குறித்த சில தகவல்களை கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகை ஸ்ருதி ஹாசன் செலுங்கில் நடித்துக் கொண்டிருந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்ததுடன் அதற்காக சில காரணங்களையும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்ருதியை சீண்டிய புது நடிகர்
தெலுங்கு படமான டெகாய்ட்டில் புதுமுக கதாநாயகனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார். அந்தப் படத்தின் ஹீரோ, ஸ்ருதி ஹாசன் கமலின் மகள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் தொடர்ந்து அவரை சீண்டி உள்ளாராம். இதை தாங்க முடியாத ஸ்ருதி முதலில் பொறுத்துப் போனாராம். பின் அவரின் நடவடிக்கை குறித்து இயக்குநரிடம் கூறியும் எந்தப் பலனும் இல்லாமல் போனதாம்.
அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன டைரக்டர்
அதுமட்டுமல்லாமல் புதுப் பையன். ஆர்வ கோளாறில் ஏதாவது செய்திருப்பார். கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்யுமாறும் அறிவுறுத்தினாராம்.
இதனால் கடுப்பான ஸ்ருதி அந்த தெலுங்கு படத்தில் இருந்து விலகி உள்ளார் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஸ்ருதி ஹாசனுக்கு நடந்த இந்த நிகழ்வை தெலுங்கு பத்திரிகை எல்லாம் பெரிதாக்கி விட்டது. இதையடுத்து அந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு பதில் மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இட்லி கடையால் பிஸியான தனுஷ்
நடிகர் தனுஷ் அவரது 50வது திரைப்படமான ராயனின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்தும் தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது, அவர் இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
வைரல் காய்ச்சலால் அவதி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு சமயத்தில் அதை பாதியில் நிறுத்தி விட்டு அமெரிக்கா சென்று வந்தார். இதுகுறித்து விசாரிக்கையில் அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறினர். அவரால் சண்டைக் காட்சிகளில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாம். இப்போது வரை அவருக்கு காய்ச்சல் குறையவே இல்லையாம்.
இந்தக் காரணங்களால் தற்போது இட்லி கடை படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம். மேலும், இட்லி கடை படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் நடக்கலாம் என தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்