'தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே.. இது 4ஆவது முறை’:தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே.. இது 4ஆவது முறை’:தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின்

'தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே.. இது 4ஆவது முறை’:தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின்

Marimuthu M HT Tamil Published May 08, 2025 04:39 PM IST
Marimuthu M HT Tamil
Published May 08, 2025 04:39 PM IST

- ‘திடீர்னு நான் இறந்த மாதிரி, வரும் தகவலைக் கேட்டுட்டு எங்க வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து இழப்பு ஆகிடுச்சுன்னா, என்ன ஆவுறது. ஏற்கனவே, எங்க வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து நான்கு பேர் இறந்திட்டாங்க’ என தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

'தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே.. இது 4ஆவது முறை’:தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின்
'தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே.. இது 4ஆவது முறை’:தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின்

வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி ஆகியப் படங்களில் பிரபலமானவர், நடிகர் பெஞ்சமின். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சிலர் யூடியூபில் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அவரது இல்லத்தில் சென்று, துக்கம் விசாரித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த நடிகர் பெஞ்சமின் தான் உயிருடன் இருப்பதாக வேதனையுடன் பேட்டியளித்திருக்கிறார்.

நடிகர் பெஞ்சமின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி தவறுதலான செய்தியைப் போட்டு, என்னுடைய புகழை களங்கப்படுத்துவதற்காக, இப்படி போட்டிருக்காங்க.

திருப்பாச்சி பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் போட்டிருப்பது நான்காவது முறை. ரொம்ப சங்கடமாக இருக்கு. சமூக வலைதள செய்திகளைப் பார்த்திட்டு, நான் இறந்து போய்விட்டதாக, என் வீட்டில் போய் விசாரிச்சிட்டு இருக்காங்க.

அதுவும் நான் இறந்திட்டதாக, என் மனைவியிடம் போய் சேலத்தில் இறங்கி விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க.நான் இப்போது, பரமத்திவேலூரில் ‘கோரைக்காரன்’ அப்படிங்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.

‘ரொம்பக் கஷ்டமாக இருக்கு’: நடிகர் பெஞ்சமின்!

இந்த மாதிரி ஒரு சில நண்பர்கள், அவங்களுக்கு வியூஸ் வரணும் என்பதற்காக, நடிகர் பெஞ்சமின் இறந்துபோயிட்டார், செத்துப்போயிட்டார்னு எல்லாம் சொல்லி சமூக வலைதளத்தில் செய்தி விடுறாங்க. ரொம்பக் கஷ்டமாக இருக்கு ஐயா.

திடீர்னு இந்த மாதிரி, இந்த தகவலைக் கேட்டுட்டு எங்க வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து இழப்பு ஆகிடுச்சுன்னா, என்ன ஆவுறது.

ஏற்கனவே, எங்க வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து நான்கு பேர் இறந்திட்டாங்க. எனக்கும் ஹார்ட் அட்டாக் வந்து பிழைச்சிருக்கேன். தயவுசெய்து அந்த மாதிரி போடாதீங்க அண்ணே. வியூவர்ஸ் வரணும்கிறதுக்காக, இந்த மாதிரி பண்ணுனீங்க என்றால் என்னணே, அர்த்தம். நாலாவது முறை போடுறீங்க. தயவு செய்து இதுவேண்டாம்.

இப்படி எல்லாம் பிழைக்கணும் என்கிற அவசியம் உங்களுக்கு இல்லை. ஆண்டவன், உங்களுக்கு கை, கால் நல்லா கொடுத்திருக்கார். கஷ்டப்பட்டு உழைச்சு, சம்பாதிச்சு, சாப்பிடுங்க.

’பெஞ்சமின் செத்துப்போயிட்டார் அப்படின்னு சொல்லிபோடுறது எந்த விதத்தில் நியாயம்’: நடிகர் பெஞ்சமின்

இந்த மாதிரி சமூக ஊடகங்களில், இவர் செத்துப்போயிட்டார், அந்த நடிகர் செத்துப் போயிட்டார், பெஞ்சமின் செத்துப்போயிட்டார் அப்படின்னு சொல்லிபோடுறது எந்த விதத்தில் உங்களுக்கு சரியாகப்படுதுன்னு எனக்குத் தெரியலை.

வேண்டாம்ணே பிளீஸ். தயவுசெய்து இனி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் அப்படின்னு இந்த நேரத்தில் கேட்டுக்கிறேன்.

என் கூட இருக்கிறவங்க தான், ’கோரைக்காரன்’ நடிக்கிற படக்குழுவினர். எல்லாரும் ‘கோரைக்காரன்’ படத்தில் நடிச்சிட்டு இருக்கோம். ஜாம் ஜாம்னு நடிச்சிட்டு இருக்கேன். நல்லாயிருக்கேன். இனிமேல், இந்த மாதிரி தவறான செய்திகளைப் பதிவு பண்ணாதீங்கன்னு காலில் விழுந்து கேட்டுக்கிறேன்’’ எனக் கேட்டுக்கொண்டார், நடிகர் பெஞ்சமின்.

கனகராஜ் என்னும் துணைநடிகர் பேசியதாவது, ‘ பெஞ்சமின் அண்ணனை அடிக்கடி இந்த மாதிரி தொந்தரவு செய்யாதீங்க. நீங்க உதவி பண்ணலைன்னாலும் பரவாயில்லை. அவருக்கு உபத்திரம் கொடுத்திருக்கீங்க. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு. இரண்டு பெண் குழந்தைகளையும் கரை சேர்க்கணும் அவரு. அடிக்கடி இப்படி, பெஞ்சமின் இறந்திட்டார்னு செய்திபோட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, டென்ஷன் பண்ணாதீங்க.

உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன். இந்த மாதிரி தகவலைப் போடாதீங்க. இந்த மாதிரி தவறான செய்தியைப் போடாதீங்க' எனக் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மற்றொரு துணை நடிகர், ‘’அண்ணன் வந்து கோரைக்காரன் படத்தில் அருமையாக நடிச்சிட்டு இருக்கார். அவருடைய பெயரை களங்கப்படுத்தாதீங்க. அருமையாகப் பண்ணிட்டு இருக்கார். படம் பிரமாதமாக வரும்.

பெயர் சொல்ற அளவுக்கு வரும். அருமையாகப் பண்ணிட்டு இருக்கோம். அதனால் பெயரை தயவுசெய்து களங்கப்படுத்தாதீங்க. அதைத்தான் அன்போடு கேட்டுக்கிறேன்'’ என்றார்.