ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் ஜெயம்ரவி மும்பை சென்றதே இரண்டாம் திருமணம் செய்வதற்காகத் தான் என பலரும் கருத்து தெரவித்து வந்த நிலையில், அதற்கு பயில்வான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது மக்கள் விரும்பும் நாயகனாக மாறியுள்ளார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எம்.ராஜேஷின் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரும் நிலையில், அவர் அப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.
ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பு
இதற்கிடையில் தான், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான காரணங்கள் எதுவும் கூறாமல் இருந்த ஜெயம்ரவி, மனைவி மற்றும் அவரது தாயார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், இதற்கு முன் 2 முறை ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
பயில்வான் கருத்து
இந்நிலையில் தான் அவர், தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். இதுதொடர்பாக பல வதந்திகள் வந்த நிலையில், ஜெயம் ரவி மும்பைக்கு சென்ற காரணம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் அவரது மெட்ரோ மெயில் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.