ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Oct 19, 2024 02:01 PM IST

நடிகர் ஜெயம்ரவி மும்பை சென்றதே இரண்டாம் திருமணம் செய்வதற்காகத் தான் என பலரும் கருத்து தெரவித்து வந்த நிலையில், அதற்கு பயில்வான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?
ஜெயம் ரவி மும்பை போனது இரண்டாம் திருமணம் செய்யவா? பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பு

இதற்கிடையில் தான், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான காரணங்கள் எதுவும் கூறாமல் இருந்த ஜெயம்ரவி, மனைவி மற்றும் அவரது தாயார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், இதற்கு முன் 2 முறை ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

பயில்வான் கருத்து

இந்நிலையில் தான் அவர், தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். இதுதொடர்பாக பல வதந்திகள் வந்த நிலையில், ஜெயம் ரவி மும்பைக்கு சென்ற காரணம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் அவரது மெட்ரோ மெயில் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

வீட்டோடு மாப்பிள்ளையின் கஷ்டம்

வீடியோவில் பேசிய பயில்வான், ஒருவர் வீட்டு மாப்பிள்ளையாக போனால் மிகவும் கஷ்டமானது. வீட்டின் அனைத்து கன்ட்ரோல்களும் மாமியாரிடம் தான் இருக்கும். இதனால், ஜெயம்ரவி அனைத்திற்கும் அவரது மாமியாரிடம் தான் அனுமதி கேட்க வேண்டிய சூழல் இருக்கும். அதுவே, அவருக்கு மன வேதனையை அளித்துவந்த நிலையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி ஆர்த்தியும் தன்னை சந்தேகப்பட்டு வேவு பார்க்கிறார். ஜெயம் ரவியை நம்பாமல் அவருடைய உதவியாளரிடம் தகவல்களை பெறுவதும் அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கும்.

நீதிமன்றத்தில் தான் உண்மை தெரியும்

இருப்பினும், இவர்கள் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து சமாதன முயற்சிகளும் நடந்துள்ளது. பின், தன் மகள் மீது தான் தவறு உள்ளது என்பதை புரிந்துகொண்ட ஆர்த்தியின் தந்தை பின் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து குறித்து விளக்கமளிக்க வேண்டும். விவாகரத்திற்கான காரணம் என்ன என்பது நீதிமன்றத்தில் முன் தான் கூற முடியும். இது இவர்கள் இரண்டு பேரின் தனிப்பட்ட விவகாரம். இது வெளியில் யாருக்கும் தெரியப் போவதும் இல்லை என்றார்.

மும்பையில் செட்டில்

இதற்கிடையில் ஜெயம் ரவி தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளது குறித்து பேசினார். அப்போது, சென்னையிலே தொடர்ந்து இருந்தால் அவரது மனதை மேலும் இருக்கமாக்கும் என எண்ணி அவர் மும்பை வந்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், அவர் தமிழ் படங்கள் செய்து கொண்டிருந்த போதே அவருக்கு இந்தியிலும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதை ஜெயம் ரவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது, வரும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம் என முடிவெடுத்து மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். அத்துடன் அவர் பிரதர் படத்தின் ப்ரொமஷன் வேலைகளிலும் இறங்கியுள்ளார் என்றார், புது இடமும் சூழலும் அவருக்கு புத்துணர்ச்சியை அளிக்கலாம் எனவும் கூறினார்.

2ம் திருமணமா?

மேலும் பேசிய அவர், பாடகி கெனிஷாவுடன் தனக்கு இருப்பது நல்ல நட்பு மட்டுமே. அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த போது எனக்கு உதவி செய்தார் அவ்வளவு தான் எனக் கூறியுள்ளார். அத்துடன் பலரும் ஜெயம் ரவி 2ம் திருமணம் செய்யவே மும்பை சென்றுள்ளார் எனக் கூறியனர். ஆனால். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் முதலில் ஜெயம் ரவி அதைத் தான் கவனிப்பார்.

ஒன்றாக வாழவும் வாய்ப்பு

அத்துடன், ஒருவேளை ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சந்தித்து பேச நேர்ந்தால், ஆர்த்தி, அவரது தாயை பிரிந்து தனியாக வந்து குடும்பம் நடத்தினால் ஜெயம் ரவி ஒன்றாக வாழ சம்மதிக்கவும் செய்யலாம். இதனால், இவர்கள் விவகாரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுமையாகத் தான் கூற முடியும் என பேசியிருக்கிறார்.