Balaji Murugadoss: ‘இல்லாதவன ஏன் செய்றீங்க.. இருமுனை கத்தி ட்ராவல்! - கொந்தளித்த பாலாஜி முருகதாஸ்!
Balaji Murugadoss: இது நம்முடைய கட்டுப்பாட்டில் எப்போதுமே இருக்காது. இந்தத் துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; அதற்குச் சரி சமமாக கெட்டவர்களும் இருக்கிறார்கள். - பாலாஜி முருகதாஸ்

Balaji Murugadoss: ஃபயர் திரைப்பட காட்சியை திரையரங்கில் பார்த்த பாலாஜி முருகதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பில் அவர் பேசும் போது, ‘முதலில் கிரவுண்ட் கொடுத்தால் தானே ஆட முடியும்; கிரவுண்ட் கொடுக்காமல் உனக்கு ஆடத் தெரியாது என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த கேரக்டரை நான் தேர்வு செய்தது மட்டும் கிடையாது. இந்தக் கெரியரை நான் தேர்ந்தெடுத்ததும் இருமுனை கத்தி போன்றது தான்.
கட்டுப்பாட்டில் இல்லை.
இது நம்முடைய கட்டுப்பாட்டில் எப்போதுமே இருக்காது. இந்தத் துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; அதற்குச் சரி சமமாக கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால், எங்களை பற்றி நீங்கள் எழுதும் பொழுது, பேசும் பொழுது, தயவு செய்து எங்களது தன்னம்பிக்கையும், அல்லது சுயமரியாதையும் பாதிக்கப்படாத வகையில் எழுத, பேச வேண்டும்.
நேரத்தை வீணாக்குகிறார்கள்
தயாரிப்பாளரோ அல்லது சினிமாவைச் சார்ந்தவரோ புதிதாக வருபவருக்கு போலியான வாக்குறுதி கொடுத்து அவர்களது நேரத்தை வீணாக்குகிறார்கள் ஏன் என்று கேட்டால், உனக்கு நடிக்க வராது என்று கூறுகிறார்கள்.
அவரை நான் என்றுமே மன்னிக்க விரும்பவில்லை. இந்த கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கு ஒரு துளி கூட வருத்தப்படவில்லை. இதில் நான் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருந்தன.
குறிப்பாக எனக்கு நிறைய நேரம் இருந்தது. என்னுடைய சுற்றுவட்டாரம் எனக்கு இருக்கக்கூடிய பின்புலம் எல்லாமே வேறு. ஆகையால், என்னுடைய பின்புலத்தையோ அல்லது என்னுடைய சுற்று வட்டாரத்தையோ உங்களுடைய பின்புலம் அல்லது சுற்றுவட்டாரத்துடன் நீங்கள் ஒப்பிட முடியாது.
பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன் முதல் படத்தில், என்னுடைய முகத்தில் எக்ஸ்பிரஷன்களே வராது என்று விமர்சனம் செய்திருக்கிறார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; அது உண்மையாக கூட இருந்திருக்கலாம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு நடிகருக்கு நடிப்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும். முதல் படத்தில் நடித்த போது, நான் மானிட்டரில் கூட சென்று பார்த்தது கிடையாது. கிட்டத்தட்ட 30 நாட்களில் அந்த திரைப்படத்தை நாங்கள் முடித்தோம்.
இதை நினைத்து நான் கவலைப்படவில்லை ஆனால், இவன் தேறமாட்டான் என்று நீங்கள் முத்திரை குத்துகிறீர்கள் அல்லவா? அதை ஏன் இருக்கிறவனுக்கு செய்ய மறுக்கிறீர்கள், இல்லாதவனுக்கு செய்கிறீர்கள்.’ என்று பேசினார்.
யார் இந்த பாலாஜி முருகதாஸ்
மாடலிங் துறையில் பிரபலமாகி, பிக்பாஸ் சீசன் -4 -ல் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட அவர், அடுத்ததாக ஓடிடியில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். அதில், தேர்ந்த போட்டியாளராக கடைசி வரை வந்த அவர், அதன் டைட்டில் வின்னராகவும் மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பாலாஜிக்கு கிடைத்தது. அந்த வகையில், அவர் கமிட் ஆன திரைப்படம்தான் ஃபயர். இந்தப்படத்தை, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார், தன்னுடைய ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இதில் பாலாஜி உடன் இணைந்து, ரக்ஷிதா மகாலட்சுமி, சிங்கம் புலி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, காயத்ரி ஷா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் நேற்றைய தினம் வெளியானது.
டி.கே இசையமைத்து இருக்கும் இந்தப்படத்திற்கு சதிஷ் ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் காட்சி ஒன்றில், ரக்ஷிதா படு கிளாமராக நடித்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்