Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..

Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 25, 2025 07:54 AM IST

Shihan Hussaini: நடிகரும் கராத்தே, வில்வித்தை பயிற்சியாளருமான ஹூசைனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..
Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..

அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி, இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கராத்தே, வில்வித்தை வீரர்களிடம் மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாலசந்தரால் அறிமுகம்

கராத்தே ஹூசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார். கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயிற்சியாளராக இருந்து வரும் இவர் தற்காப்பு கலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

பவண் கல்யாணுக்கு ஆசிரியர்

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருந்து வரும் பவன் கல்யாண், ஹூசைனியின் மாணவராக இருந்துள்ளார். ஹூசைனி கராத்தே மட்டுமல்லாமல், வில்வித்தை, சமையல் கலை போன்ற துறைகளிலும் பிரபலமானவர்.

புற்று நோய் பாதிப்பு

ரத்த புற்று நோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹூசைனி தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்னும் சில நாட்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்கப்போவதாக உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்கு நாள்தோறும் 2 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தன்னை கைவிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

ஷிஹான் ஹுசைனி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவின் மூலம் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். தான் மறைந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார், தனது கராத்தே சங்கத்தின் நீண்டகால வழிகாட்டியாக இருந்ததாகவும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தன் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், தனது கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் தனது இதயத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், இது அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆழமான பிணைப்பைக் குறிக்கிறது. ஒரு வழிகாட்டி, பயிற்சியாளர் மற்றும் போராளியாக எனது மரபு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

ஹூசைனியின் ஆசை

முன்னதாக, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தளபதி விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், இந்தத் துறைகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் ஆதரவை நாடுகிறேன். விளையாட்டு மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம் அவரது மாணவர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று கூறியிருந்தார்.

இறுதிவரை போராட்டம்

நடிகர் ஹூசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தான் உயிர் வாழ தினமும் 2 பாட்டில் ரத்தம் தேவைப்படும் சமயத்திலும் சற்றும் பயப்படாமல் சிகிச்சைகளை எதிர்கொண்டார். ஒரு கராத்தே வீரன் தினமும் மரணத்தை சந்திக்க போராடுபவன் என்று கூறிய அவர், இறுதி மூச்சுவரை தனது ஒவ்வொரு நாளையும் பாசிட்டிவ்வாக மாற்றிக் கொண்டிருந்தார். தன் உடன் இருப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தாமல் இருக்க, அவர்களுக்காக இசையமைப்பது, கலந்துரையாடுவது உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.