'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..

'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 03:12 PM IST

நடிகர் கவுண்டமனியின் மனைவி சாந்தி மரணம் குறித்தும் கவுண்டமனியின் உடல்நிலை குறித்தும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..
'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..

பொதுவெளியில் வராத குடும்ப வாழ்க்கை

இதுதொடர்பாக அவர் மெட்ரோ மெயில் எனும் யூடியூப் சேனலில் பேசுகையில், ஆரம்பத்தில் இருந்தே நடிகர் கவுண்டமனி தன் குடும்பத்தை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் பொதுவெளியில் வெளியிட்டதே இல்லை. அதையும் மீறி யாராவது கேட்டால், என் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள உனக்கென்ன ஆர்வம் என அவருக்கே உண்டான தொனியில் கேட்பார் என்கிறார்.

சிலருடன் மட்டும் நட்பு

அத்தோடு கவுண்டமணி நடிகன். அவன் காசு வாங்குறான். அவன பத்தி எழுதுறீங்க. அது உங்க கடமை. என் பொண்டாட்டி பத்தி நீ எதுக்கு எழுதனும் என கேட்பார் என்றார். ஆரம்பத்தில் இருந்தே கவுண்டமனி எல்லா விழாக்களுக்கும் தனியாகத்தான் செல்வார். அதுவும் அவர் குறிப்பிட்ட சிலருடன் மட்டும் தான் பழக்கத்தில் இருப்பார். அதனால் தான் அவருடைய மனைவியின் மரண செய்தி அறிந்தும் திரைத்துறையில் சிலரே வந்து அவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கவுண்டமனி திருமணம்

கவுண்டமனி தற்போது சினிமாவில் எல்லோருக்கும் மூத்தவர். அவருக்கு இப்போது 85 வயதாகிறது. கவுண்டமனி தன்னை விட 20 வயது குறைவான சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சாந்தி நாடகங்களில் நடித்து வந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்தவர். நாடகங்களில் கவுண்டர் வசனம் பேசுவதால் அவரை கவுண்டர் மணி என அழைப்பார்கள். அதனை பலரும் ஜாதிப் பெயர் என தவறாக புரிந்து கொண்டனர் என்றும் கூறப்படுவதாக பயல்வான் கூறுகிறார்.

கவுண்டமணி உடல்நிலை

என்னைப் பொருத்தவரை மனைவி இறந்துவிட்டாலே, ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான். வீட்டிற்கு வந்த உடனே நம்மை விசாரிக்க ஒரு துணையாக இருப்பவர் தான் மனைவி. அவரும் இறந்து போனால் அது ஒரு ஆணை மிகவும் பாதிக்கும். அதோடு கவுண்டமணியே சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார். இப்போது அவரின் மனைவியின் மரணம் அவரை வெகுவாகவே பாதிக்க வாய்ப்புள்ளது.

மகள் திருமணம்

யூடியூப் சேனலல்களை எல்லாம் ரொம்ப அதிகமா பாக்குறவங்களுக்கு தான் சமீபத்துல கவுண்டமனியோட மூத்த மகள் சுமித்ராவுக்கு கல்யாணம் ஆனது தெரியும். அவர் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மாதம்தோறும் வந்து சேவை செய்து வருகிறார் என்ற செய்தியே அப்போது தான் பலருக்கும் தெரிந்தது. கவுண்டமணி சினிமாவில் இருந்தாலும் அவரது மகள்களை சினிமா பக்கவே கொண்டு வராமல் இருக்கிறார். அவரது மூத்த மகளுக்கு கே.எஸ். ரவிக்குமார் தான் முன்னின்று மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார் எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.