'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..
நடிகர் கவுண்டமனியின் மனைவி சாந்தி மரணம் குறித்தும் கவுண்டமனியின் உடல்நிலை குறித்தும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

'மனைவி இறந்தாலே ஒருவன் பாதி மனுஷன் ஆகிடுறான்..' கவுண்டமனி மனைவி மரணம் குறித்து பயில்வான் கருத்து..
நடிகர் கவுண்டமனியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கொடிகட்டி பறந்த கவுண்டமனியின் குடும்பம், குழந்தைகள் பற்றி ரசிகர்களுக்கு அல்ல பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கே எதுவும் தெரியாத அளவில் தான் இருக்கிறது. இந்நிலையில், கவுண்டமனி மற்றும் அவரது குடும்பத்தை பற்றி பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் பேசியுள்ளார்.
பொதுவெளியில் வராத குடும்ப வாழ்க்கை
இதுதொடர்பாக அவர் மெட்ரோ மெயில் எனும் யூடியூப் சேனலில் பேசுகையில், ஆரம்பத்தில் இருந்தே நடிகர் கவுண்டமனி தன் குடும்பத்தை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் பொதுவெளியில் வெளியிட்டதே இல்லை. அதையும் மீறி யாராவது கேட்டால், என் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள உனக்கென்ன ஆர்வம் என அவருக்கே உண்டான தொனியில் கேட்பார் என்கிறார்.