Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி

Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி

Malavica Natarajan HT Tamil
Published Feb 09, 2025 04:27 PM IST

Santhana Bharathi: நான் பாலச்சந்தர் படம் பார்த்து தான் சினிமாவுக்கு வரணும்ன்னு ஆசைப்பேட்டேன் என நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி
Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி

Santhana Bharathi: தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் சந்தான பாரதி. இவர் காமெடி கதாப்பாத்திரமானாலும், குணச்சித்திர வேடமானாலும் அதனை அவருக்கே உரித்தான முறையில் நடித்து காட்டுவார். அப்படி இருப்பவர் சில மாதங்களுக்கு முன் வசந்த் டீவியின் காட் பாதர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தான் சினிமாவிற்கு வந்த கதை, நண்பர்கள் குறித்து பேசியிருக்கிறார்.

நான் சினிமாவுக்கு வர காரணமான படம்

அந்தப் பேட்டியில், " நான் டிகிரி முடிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருந்தேன். என்னோட கேங்ல இருக்க எல்லாரும் சினிமா சம்பந்தபட்டவங்க. ஆனாலும் எனக்கு சினிமா துறைக்குள்ள வரணும்ன்னு ஆசையில்ல. அண்ணாதுரை அசிஸ்டன்ட் டைரக்டரான ஆனதுக்கு அப்புறம், அன்பில் பொய்யாமொழி என்னோட கிளாஸ்மேட். அவரோட கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் திருச்சி போறோம். அப்போ தான் அபூர்வ ராகங்கள் படம் ரிலீஸ். நான் காலேஜ் படிக்கும் போது பாலச்சந்தர் படம் நிறைய பாப்பேன். அதெல்லாம் ரொம்ப வித்யாசமான படமா இருக்கும். அப்போ நான் அபூர்வ ராகங்கள் படம் பார்க்கும் போது தான் நாம ஏன் சினிமாவுக்கு வரக்கூடாதுன்னு எனக்கு தோணுச்சு.

கண்ணதாசன் சார்கிட்ட தான் போனேன்

என் நண்பர் கமலும் சினிமாவுக்கு வந்துட்டாரு. அண்ணாதுரையும் சினிமாவுக்கு வந்துட்டாரு. இப்படி சுத்தி சுத்தி எல்லாரும் சினிமாவுக்கு வந்துட்டாங்க. அதுனால, நேர சென்னை வந்துட்டேன். அங்க வந்து அண்ணாதுரையோட அப்பா, கவிஞர் கண்ணதாசன தான் பாத்தேன். அவர்கிட்ட அண்ணே நான் யார்கிட்டயாவது அசிஸ்டன்ட் டைரக்டரா போகணும்ன்னு சொன்னேன். அவரு யார்கிட்ட சேரணும்ன்னு கேட்டாரு. நான் பாலச்சந்தர் சார்கிட்ட சேரணும்ன்னு சொன்னதும், நான் அவர்கிட்ட பேச முடிஞ்சா இத சொல்றேன்னு சொல்லிட்டாரு. ஆனா அவர பாக்கவே முடியல பிஸியாவே இருந்தாரு. அதுனால கண்ணதாசன் சார் அவரோட பிரண்ட் ஒருத்தர்கிட்ட என்ன ரெக்கமெண்ட் பண்ணாரு.

நடிக்க தகுதி இருந்தது

அசிஸ்டன்ட் டைரக்டரா போகாம நடிக்க போயிருந்திருக்கலாம். ஆனா அந்த சமயத்துல நடிகருக்குன்னு சில தகுதி எல்லாம் இருந்தது. அதுவும் இல்லாம சினிமாவுல நான் நடிகனா வரணும்ன்னு ட்ரை பண்ணவே இல்ல. நான் ட்ரை பண்ணுனது எல்லாம் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு தான். நடிகனா ஆகணும்ன்னா படம் ஹிட் ஆனா தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கும். யார் நம்மள நடிக்க கூப்டுறாங்கன்னு தெரியாது. நமக்கு மார்க்கெட் இருக்குமா இல்லையான்னும் தெரியாது. ஆனா அசிஸ்டன்ட் டைரக்டாரா இருந்தா ஏதாவது ஒரு படத்துல வேலை செஞ்சிட்டே இருக்கலாம்.

சினிமா ட்ரெண்ட் நிச்சயம் மாறும்

ஒரு படம்ன்னா காரம், ஸ்வீட், கசப்புன்னு எல்லாமே இருக்கும். ஆனா இப்போ இருக்க படத்துல வெறும் காரம் மட்டும் தான் இருக்கு. வெட்டு குத்து, வெட்டு குத்துன்னே படம் போகுது. அப்படி இல்லையா துப்பாக்கி வந்திடுது. கிராம பிண்ணனியில படம் எடுத்தா கூட அதுலயும் இதே கதை தான். இந்த சென்டிமெண்ட், குடும்ப பாசம் அதெல்லாம் இப்போ காணாமலே போச்சு. குடும்ப படமே காணாம போச்சு.

இப்போ வர்ற படம் எல்லாம் கமெர்ஷியலா தான் வருது. நல்ல படம் வந்தாலும் அதுக்கு சரியான வரவேற்பு இல்லாததுனால எல்லாரும் கமர்ஷியல் சைடு போயிட்டாங்க. அதுனால எனக்கு இப்போ ரிலீஸ் ஆகுற படங்கள் மீது கருத்தே இல்ல. இப்போ இருக்க படம் எல்லாம் வெட்டு, குத்து, சண்டைன்னு தான் இருக்கே தவிர படம் இல்ல. நிம்மதியா ஒரு படம் பார்க்க முடியல. இந்த ட்ரெண்ட் எப்போ மாறும்ன்னு தெரியல. சினிமா ஒரே ட்ரெண்டுல இருக்காது. அதுனால நிச்சயம் இது மாறும்ன்னு நெனக்குறேன்.

கங்கை அமரன் தான் ட்ரீட் வைப்பான்

நான் அசிஸ்டென்ட் டைரக்டரா சேறும் போது தான் எனக்கு இளையராஜா அண்ணன் பழக்கம். அவரு அமர்சிங் அண்ணனுன்னு தெரியும். ஆனா மத்தபடி அவரோட பெரிய பழக்கம் இல்ல. அதுக்கு அப்புறம் நான் டைரக்டரா இருந்த சமயத்துல தான் அவரோட நெருங்கி பழகுனேன். அவரு இப்போவும் என்ன அவரோட சகோதரனா தான் பாக்குறாரு. ஆரம்ப காலத்துல எங்களுக்கு எல்லாம் பெருசா வருமானம் இல்ல. அப்போ கங்கை அமரன் தான் எங்க எல்லாருக்கும் டீ, ஸ்நாக்ஸ் வாங்கி தருவாரு.

கமலும் நானும் சேந்தா சினிமா தான்

நானும் கமலும் நல்ல பிரண்ட்ஸ். நாங்க ஒன்னா சேர்ந்தா படம் பாப்போம். கொடைக்கானல்ல இருக்க அவரோடஃபார்ம் ஹவுஸ்க்கு போவோம். அப்படி இல்லையா எப்போவும் நாங்க கமல் சார் ஆபிஸ்ல தான் இருப்போம். அங்க தான் படம் பாக்குறது. அங்க தான் டிஸ்கஸ் பண்றது, சமயத்துல படத்தோட கதையே அங்க தான் ஆரம்பம் ஆகும். நாங்க என்ன பேசினாலும் கடைசியில அது வந்து நிக்குற இடம் சினிமாவா தான் இருக்கும்" என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.