Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!;அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!;அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?

Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!;அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 11, 2025 05:43 PM IST

அணியின் நலன் கருதி அஜித்குமார், துபாய் 24H கார் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா
Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா

அப்போது அவரை காண வந்திருந்த அவரின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில், அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில், அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், ‘நீண்ட சீசனுக்கு முன்னால் இருக்கும் சவால்களை கருத்திக்கொண்டு அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், அஜித் குமாரின் நல்வாழ்வும், அணிகளின் ஒட்டுமொத்த வெற்றியும் முதன்மையான விஷங்களாக இங்கு இருக்கின்றன. 

அணியின் நலன் கருதி 

ஆகையால் குழுவானது முழுமையாக ஆலோசனை செய்து, திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றத்தின் படி, துபாய் 24H தொடரில் அஜித்குமார் வீரராக பங்குகொள்ள வில்லை என்ற தன்னலமற்ற முடிவை எடுத்திருக்கிறார். 

தன்னுடைய தனிப்பட்ட அபிலாஷைகளை ஒதுக்கி வைத்து விட்டு அஜித் இந்த முடிவை எடுத்திருப்பது அணியின் நலனுக்காதான். உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் இத்தகைய செயல்கள், அவரது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நிலையான உத்வேகமாக இருக்கும்.

ஓட்டுநராக எப்போது பார்க்கலாம் 

 

மோட்டார் ஸ்போர்ட்டின் மீதான அபரிதமான ஆர்வம் கொண்ட அஜித்குமார் துபாய் 24H சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பார். போர்ஷே 992 கப் காரில் (நம்பர் 901) பாஸ் கோட்டனின் அஜித்குமார் ரேசிங்கின் உரிமையாளராக அஜித் உள்ளார். அதே நேரத்தில் போர்ஷேயில் ரஸூனின் கேமன் ஜிடி4 (நம்பர் 414) அஜித்குமார் ரேசிங்கிற்கு நிகழ்வில் போட்டியிடுகிறார்.

அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளனர். அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருகிறது. தன்னுடைய இரு அணிகளுக்காகவும் அஜித் களத்தில் இருப்பது அங்கிருக்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மோட்டார் ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித்குமாரின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது. தான் ஏற்றிருக்கும் இந்த இரண்டு பொறுப்புகளையும் சரியாக செய்ய அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியது என்பது உறுதி.’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அளவு கடந்து நேசிக்கிறேன்

முன்னதாக, அங்குள்ள தனியார் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,‘நான் உண்மையில் இவ்வளவு ரசிகர்களை எதிர்பார்க்கவில்லை. நான் அவர்களை நேசிக்கிறேன்;அளவு கடந்து நேசிக்கிறேன். நடிப்பும் சரி, ரேஸிங்கும் சரி இரண்டிற்கும் நாம் உடல்ரீதியாகவும், எமோஷனல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

எனக்கு ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை செய்வது பிடிக்காது. அதனால், நான் அதனை செய்யமாட்டேன். நான் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். இது எல்லா வழிகளிலும் நன்றாக இருக்கிறது. நான் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் ஜனவரியிலும், இன்னொரு திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலும் ரிலீஸ் ஆகிறது.இது தொழில்ரீதியான என்னுடைய ரேஸிங்கிற்கு தேவையான நேரத்தைக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.’ என்று பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.