'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதைப் பெற்ற பின் அளித்த பேட்டியில் தன் மனைவி ஷாலினி குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.

'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசு நேற்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினை நேற்று வழங்கியது. இதையடுத்து, அஜித் குமார் இன்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
பட்டங்களை விரும்பியதில்லை
அப்போது, தல, சூப்பர் ஸ்டார் பட்டங்களை அஜித் விரும்பாதது தான் அஜித்தின் இந்த உயர்வுக்கு காரணம் என்ற பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா என நிருபர் கேள்வி எழுப்பினார்.
