நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!

நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!

Divya Sekar HT Tamil Published Nov 19, 2024 02:57 PM IST
Divya Sekar HT Tamil
Published Nov 19, 2024 02:57 PM IST

நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!
நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!

பாலா சாருக்கு நன்றி

அதில், “என்னுடைய பிறந்தநாள் அன்று வணங்கான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது எனக்கு பெரிய பரிசாக நான் நினைக்கிறேன். வணங்கான் என்னுடைய கெரியரில் மிக முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலா சாருக்கு நன்றி. இந்த படத்தில் என்னை ஒரு நடிகராக வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வணங்கான் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும்” என சொல்கிறார்.

பிறகு செய்தியாளர் ஒருவர் பாலா படம் என்றாலே மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று சொல்வார்கள் உங்களுக்கு அப்படி இந்த படத்தில் இல்லையா, கஷ்டப்படுத்தவே இல்லையா என கேள்வி எழுப்புகிறார்.

கஷ்டம் இல்லை

இதற்கு பதில் அளித்த அருண் விஜய் ”இஷ்டப்பட்டு செய்கிற விஷயத்தில் கஷ்டம் எதற்கு. எனக்கு அது இஷ்டம் நடிக்கிறது என்னுடைய வேலை அதனால் எனக்கு இதில் கஷ்டம் இல்லை. இஷ்டப்பட்டு இதை நான் செய்வதால் படம் முழுக்க எனக்கு கஷ்டம் தெரியவில்லை என சொல்கிறார். ஏனென்றால் அந்த படத்திற்கு என்ன தேவை அந்த பிரேமுக்கு என்ன தேவை என்பதை நாம் கொடுத்துவிட்டால் நமக்கு கஷ்டமே இல்லை. பாலா சார் படத்தில் நான் ஒர்க் பண்ணது நீங்கள் படம் பார்த்தால் தெரியும் இந்த காட்சியை எப்படி எடுத்து இருப்பார்கள் என வியப்பாக பார்ப்பீர்கள். அது எல்லாம் நான் இஷ்டப்பட்டு செய்தேன் எனக்கு அது கஷ்டமாகவே தெரியவில்லை. இந்த சமயத்தில் நான் பாலா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நாம் பெருமைப்பட வேண்டும்

என்னை பொருத்தவரை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு இயக்குனர் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். அவரின் படைப்பின் மூலமாக பார்த்து அவரை போற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அஜித் படம் வெளியாவது குறித்து கேட்ட கேள்விக்கு அஜித் சார் உச்சம் அவருக்கு யாரும் போட்டி கிடையாது அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசித்து இருக்கிறார்கள். நிச்சயமாக இது போட்டி எல்லாம் கிடையாது. அவர்கள் அறிவிப்பு வெளியிட்ட இருக்கிறார்கள் நாளடைவில் அது என்னவென்று தெரியும் எங்களுக்கு சின்ன ஒரு வழி கிடைக்கும் என நம்புகிறேன்என கூறினார்.

என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை

படத்தை நேற்று பார்த்த நடிகர் அருண் விஜய், இயக்குநர் பாலாவை பாராட்டி பதிவிட்டிருந்தார். அதில், “நம் படப்பிடிப்பின் பொழுதுகூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை”என்று தெரிவித்திருந்தார்.