தென்னிந்திய படங்கள் இந்தியை தோற்கடிக்குதா? ‘ இந்தி ஃபிலிம் மேக்கர்ஸ் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு’ -அமீர்கான் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தென்னிந்திய படங்கள் இந்தியை தோற்கடிக்குதா? ‘ இந்தி ஃபிலிம் மேக்கர்ஸ் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு’ -அமீர்கான் பேட்டி!

தென்னிந்திய படங்கள் இந்தியை தோற்கடிக்குதா? ‘ இந்தி ஃபிலிம் மேக்கர்ஸ் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு’ -அமீர்கான் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 07, 2025 06:47 PM IST

முதலில், நாம் சிறந்த படங்களை உருவாக்க வேண்டும். இந்தி திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். - அமீர்கான் பேட்டி!

தென்னிந்திய படங்கள் இந்தியை தோற்கடிக்குதா? ‘ இந்தி ஃபிலிம் மேக்கர்ஸ் நிறைய கத்துக்கிட வேண்டி இருக்கு’ -அமீர்கான் பேட்டி!
தென்னிந்திய படங்கள் இந்தியை தோற்கடிக்குதா? ‘ இந்தி ஃபிலிம் மேக்கர்ஸ் நிறைய கத்துக்கிட வேண்டி இருக்கு’ -அமீர்கான் பேட்டி!

எங்கள் வணிக மாதிரி ஒரு விசித்திரமான ஒன்றாக இருக்கிறது.

இது குறித்து ஏபிபி செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், அமீர் கானிடம் ஏன் தென்னிந்திய திரையுலகம் இந்தி படங்களை தோற்கடிக்கின்றன என்பது குறித்து கேட்கப்பட்டது.

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

அதற்கு பதில் கூறிய அமீர்கான் ‘முதலில், நாம் சிறந்த படங்களை உருவாக்க வேண்டும். இந்தி திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

தற்போது எங்கள் வணிக மாதிரி ஒரு விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. நாங்கள் மக்களை திரையரங்குகளுக்கு அழைக்கிறோம், அவர்கள் வரவில்லை என்றால், விரைவில் படத்தை OTT-ல் வெளியிடுகிறோம். இது எங்கள் படங்களை பெரிதும் பாதித்து இருக்கிறது’ என்றார்.

புரட்டிப்போட்ட கொரோனா காலம்

மேலும், கோவிட் -19 காலம் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் பாதித்து இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். ஏனெனில், பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் கொடுக்கத் தொடங்கினர். இதனால், வீட்டிலேயே படங்களையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற பழக்கம் மக்களிடையே உருவாகி விட்டது.

ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவதற்கும் ஓடிடியில் வெளியாவதற்கும் இடையே 6 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்படி பேசுவதால் நான் ஓடிடிக்கு எதிராவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உண்மையில், பல புதிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த தளம் வாய்ப்பளித்து இருக்கிறது’ என்று பேசினார்.

அமீர்கானின் தற்போதைய படங்கள்!

அமீர்கான் 2007 ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சியான சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

ஆரூஷ் தத்தா, கோபி கிருஷ்ண வர்மா, சம்வித் தேசாய், வேதாந்த் சர்மா, ஆயுஷ் பன்சாலி, ஆஷிஷ் பெண்ட்சே, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், நமன் மிஸ்ரா மற்றும் சிம்ரன் மங்கேஷ்கர் உள்ளிட்ட புதிய நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெனிலியா தேஷ்முக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமிதாப் பட்டாச்சார்யா பாடல்களை எழுத படத்திற்கு ஷங்கர்-எஹ்சான் லாய் இசையமைத்துள்ளார். இது ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.