அந்த மனசுதான் சார் கடவுள்.. ‘யாருமே சொல்லல.. அந்த மனுஷன் என பேர சொல்லி சொல்லி.. - பேட்டியில் நெகிழ்ந்த சூர்யா
பேட்டி ஒன்றில் தான் வட இந்திய மக்களுக்கு தான் பரீச்சயமானதற்கு காரணமான நபரை பற்றி நடிகர் சூர்யா மனம் திறந்து பேசினார். ‘அந்த மனசுதான் சார் கடவுள்..’

அந்த மனசுதான் சார் கடவுள்.. ‘யாருமே சொல்லல.. அந்த மனுஷன் என பேர சொல்லி சொல்லி.. - பேட்டியில் நெகிழ்ந்த சூர்யா!
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் சூர்யா, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ஊர் ஊராக சென்று படத்தை புரோமோட் செய்து வருகிறார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் வட இந்திய மக்களுக்கு தான் பரீச்சயமானதற்கு காரணமான நபரை பற்றி பேசினார்.
அமீர்கான்தான் எல்லாமே?
ஐஎம்டிபி வீடியோவுக்காக நடிகை திஷா பதானியுடன் இணைந்து சூர்யா கொடுத்த நேர்காணலில் இது தொடர்பாக பேசிய அவர் “ நான் நடித்த படங்கள் இங்கே ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறித்து, வட இந்திய மக்களுக்கு பெரிதளவில் தெரியாது என்று நினைக்கிறேன். ஆகையால், நான் அதனை மறுபடியும் கூற விரும்புகிறேன்.