ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு
ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு

ஊர்க்காரரின் கதை என்ற கமல் பற்றியும், தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே குறித்தும், முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து குறித்தும் அமரன் படக்குழு கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அதில் படத்தின் பெயர், அமரன் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.