Actress Oviya: மீண்டும் மீண்டும் சர்ச்சை.. பேசுபொருளாகும் நடிகை ஓவியாவின் அடுத்த வீடியோ!
Actress Oviya: நடிகை ஓவியா தன் கருத்துகளாலும் செய்கைகளாலும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Actress Oviya: சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளாலாலும், செய்கைகளாலும் பல விவாதங்களில் சிக்கி வைரலாகி வரும் நடிகையாக மாறி இருப்பவர் தான் நடிகை ஓவியா. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாள மொழி மட்டும் அல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ தான் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.
சிகரெட் பிடித்தபடி பீச்சில் வீடியோ
நடிகை ஓவியா ஹெலன், சமூக வலைத்தளத்தில் தனது நண்பருடன் கடற்கரைக்குச் சென்ற வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கடற்கரையில் சில மீனவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவரைக் காட்டியபடியே, கேமரா ஆன் செய்த அவர் கையில் சிகரெட் பிடித்தபடி மீனவர்களிடம் சென்றார்.
அப்போது அவர், அனைவருக்கும் ஹாய் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். பின், கடற்கரையில் இருந்த நாயின் மீது பாசமாகத் தடவிக் கொடுத்தார். பின், கடற்கரை அருகில் இருந்த சில மீனவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பீச்சில் வாக்கிங் போனது, ரெஸ்டாரென்ட்டில் எடுத்த சில புகைப்படங்களையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
திறமை இல்லாத நடிகை
நடிகை ஓவியாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதுகுறித்து பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், “திறமை இல்லாத நடிகைகள் தான் இப்படி வெளிப்படையாக இருப்பார்கள்” என்று கூறி ஓவியாவின் வீடியோவிற்கு எதிர்வினையாற்றி உள்ளார்.
நீங்களே இப்படி பண்ணா எப்படி?
இன்னொருவர், “புகைபிடிப்பது தவறானது எனக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர் நீங்கள். ஆனால், இப்படி சிகரெட் பிடித்தால் எப்படி?” என்று விமர்சனம் செய்தார். மேலும் பொது இடங்களில் இதுபோன்று நடந்து கொள்வது சரியா? என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஓவியா சந்தித்த சர்ச்சைகள்
முன்னதாக இவர் பாலியல் கல்வி குறித்தும், தனக்கு கணவரே தேவையில்லை என்றும் நேரடியாக பேசி இருந்தார். அத்தோடு, நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு சிலர் என்னை லெஸ்பியன் என்று நினைக்கிறார்கள். நான் லெஸ்பியன் அல்ல என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த கருத்துகள் ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதற்கு எவ்வித மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்காத ஓவியா, அந்த வீடியோவை பார்த்து ரசிக்குமாரும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது எல்லாம் நடந்து சில நாட்களே ஆன நிலையில், இப்போது கடற்கரையில் சிகரெட் பிடித்தபடி சுற்றித் திரிந்திருக்கிறார்.
ஓவியாவின் படங்கள்
ஓவியா சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு மக்களிடம் அதிக ரீச்சை கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அதிக பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தவருக்கு கிளாமரான படங்களே வந்தன. இந்நிலையில் ஓவியா, கடந்த ஆண்டு 'பூமர் அங்கிள்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் இரண்டு ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இப்போது 'ராஜபீம்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் நாயகியாக அல்லாமல் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்த நடிகை நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று தான். அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லையா அல்லது திரைப்படங்களை ஏற்றுக் கொள்ளவில்லையா என்பது தற்போதைய கேள்வி.
