16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை
16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை வாரணம் ஆயிரம் எனலாம். இப்படம் வெளியாகி இன்றுடன் 16ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்கள் மாஸ்டர் பீஸான படங்களாக அமையும். அந்த மாஸ்டர் பீஸான படத்தை எடுத்த படக்குழுவினர் மீண்டும் இணைந்து படம் கொடுத்தால்கூட, அந்தப் படத்தின் பிரதிபலிப்பையோ வெற்றியையோ திருப்பித் தரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படைப்பு தான், வாரணம் ஆயிரம்.
இந்தப் படத்தின் பெரிய பிளஸ் என்னவென்றால், இது வாழ்வியல் சார்ந்த படம். எந்த மனநிலையில் பார்த்தாலும், அந்த மனநிலையை மேம்படுத்த உதவும் தீர்வை இப்படம் தரும்.
ஏனெனில் வசனங்களாகவும் சரி, காட்சிகளாகவும் சரி, இப்படத்தில் பல்வேறு லேயர்கள் மறைந்து இருந்து நாம் ஒவ்வொரு முறை இந்த படத்தைப் பார்க்கும்போதும், ஒவ்வொரு வித உணர்வைத் தருகின்றன. சந்தோஷமான மனநிலையில் இருந்து பார்க்கும்போது, ஒரு அனுபவத்தைப் பெறும் உணர்வை இந்தப் படம் கடத்தும். அது சோகமான கட்டத்தில் இருந்து படத்தினைப் பார்க்கும்போது, அதில் இருந்து விடுபட உதவும் பாஸிட்டிவ் நுண்ணுணர்வினை இப்படம் நம்மிடம் கடத்தத் தவறுவதில்லை. அப்படி ஒரு நுண்ணுணர்வுமிக்க படம், வாரணம் ஆயிரம். அதில் தான் இப்படம் அனைவர் மனங்களை வென்றிருக்கிறது.