13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’

13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’

Marimuthu M HT Tamil Published Jun 17, 2024 10:34 AM IST
Marimuthu M HT Tamil
Published Jun 17, 2024 10:34 AM IST

13 Years Of Avan Ivan: சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’ திரைப்படம் என படத்தின் ஒன்லைனை சொல்லலாம். அவன் இவன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’
13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’

‘அவன் இவன்’ திரைப்படத்தின் கதை என்ன?: 

ஒரு கிராமத்தில் ஸ்ரீகாந்த் என்னும் நபருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அருகருகே வீடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மனைவிகளுக்கும் வால்டர் என்றும், கும்பிடுறேன் சாமி என்றும் மகன்கள் உள்ளனர். இவர்களது குலத்தொழில் திருட்டு என சொல்லப்படுகிறது. அதையே வால்டரும் கும்பிடுறேன் சாமியும் செய்துவருகின்றனர்.

வால்டரும், கும்பிடுறேன் சாமியும் ஊர்ப்பெரியவர் ஜமீன்தார் தீர்த்தபதியுடன் சிறுவயதில் இருந்தே பாசமுடன் இருந்து வருகின்றனர். அடிக்கடி, அவரது அரண்மனைக்குச் சென்று அரட்டையடிப்பது, பாதுகாவலர்கள் போல் இருப்பது என ஜமீன்தாருக்கு அனைத்துமாய் இருக்கின்றனர். தவிர, வால்டருக்கும் கும்பிடுறேன் சாமிக்கும் ஒத்துப்போகாமல் முட்டலும் மோதலுமாக இருக்கிறது.

வால்டருக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதால், அதை ஜமீன்தார் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார். இதற்கிடையே போலீஸ் கான்ஸ்டபிள் பேபியை பார்த்ததும், காதலில் விழுகிறான், வால்டர். ஒருநாள் போலீஸின் வாக்கி டாக்கியை வால்டரின் சகோதரர் கும்பிடுறேன் சாமி, திருடிக்கொண்டு போக, அதை மீட்டுக்கொடுக்கும்படி,வால்டரிடம் வந்து அழுகிறார், பேபி. அதன்பின், அதை மீட்டுக்கொடுக்கிறார், வால்டர். இருவருக்கும் இடையே காதல் ஒர்க் அவுட் ஆகிறது.

அதேபோல், தேன்மொழி என்னும் கல்லூரி மாணவியைக் காதலிக்கிறார், கும்பிடுறேன் சாமி. பின், அப்பெண்ணும் இவரது காதலை எடுத்துக்கொள்கிறாள்.

ஒருநாள் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் ஊக்கப்படுத்தும்விழா நடக்கிறது. அதில் பங்கு எடுக்கும் சூர்யா முன்னிலையில், வால்டர் தனது நடிப்பின்மீது இருக்கும் ஆர்வத்தில், நவரச நடிப்பையும் வெளிப்படுத்திப் பாராட்டுகிறார். ஊரே வால்டரைப் பாராட்டுகிறது. கும்பிடுறேன் சாமியும் தனது சகோதரனை நினைத்துப் பெருமைப்படுகிறார். அதன்பின் ஒருநாள் ஜமீன்தாரிடம் குடிபோதையில் தனது சகோதரன் வால்டரை தனக்கு மிகவும் பிடிக்குமென்றும், பார்ப்பதற்குத்தான் வெளியில் வெறுப்பைக் காட்டுவதாகவும் உண்மையை வெளிப்படுத்துகிறார்.

இதற்கிடையே ஒரு மாடு கடத்தல்காரனின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஜமீன்தார்,போலீஸில் சொல்லி புகார் அளிக்கிறார். இதனால் அந்த கடத்தல்காரர் கைது செய்யப்படுகிறார். அவரது தொழில் கெட்டுப்போகிறது.

சிறையில் இருந்து வெளியில் வரும் மாடு கடத்தல்காரன், ஜமீன்தாரை யாருக்கும் தெரியாமல் கடத்தி, அவரை நிர்வாணமாக்கி, கொன்று மரத்தில் தொங்கவிடுகின்றான்.

இதையறிந்த வால்டரும், கும்பிடுறேன் சாமியும், மாடு கடத்தல்காரனின் இடத்துக்கு ச் சென்று அவனை தாக்கமுயற்சிக்கின்றனர். அப்போது, அவரது அடியாட்களுடன் சண்டையிடுகின்றனர்.

இறுதியில் ஜமீன்தார் தீர்த்தபதியின் உடல் ஒரு வாகனத்தில் கம்பீரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பின் வாகனத்துடன், அவர் உடல் எரிக்கப்படுகிறது. அதற்கு அடியில் மாடு கடத்தல்காரனைக் கட்டி வைத்திருக்கின்றனர், கும்பிடுறேன் சாமியும், வால்டரும்.

தங்களை அங்கீகரித்த ஜமீன்தாரின் இறுதிச்சடங்கில் வெறித்தனமாக இருவரும் ஆடுகின்றனர். எளிய மனிதர்களின் விசுவாசத்தை, அன்பை மறைமுகமாகப் புரியவைக்கிறது படம்.

அவன் இவன் படத்தில் நடித்தவர்களின் விவரம்:

வால்டராக விஷாலும், கும்பிடுறேன் சாமியாக ஆர்யாவும், ஜமீன்தார் தீர்த்தபதியாக ஜி.எம்.குமாரும் நடித்துள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிளாக பேபி ஜனனி ஐயரும், தேன்மொழியாக மது ஷாலினியும் நடித்துள்ளனர்.

வால்டரின் தாய் மாரியம்மாவாக அம்பிகாவும், வால்டர் மற்றும் கும்பிடுறேன் சாமியும் தந்தையாக ஆனந்த் வைத்தியநாதனும் நடித்துள்ளனர். சூர்யா ஒரு சிறப்புத்தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

படத்தின் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. பாலாவின் படங்கள் எல்லாம் ரிலீஸாகும்போது, கொண்டாடப்படுவதைவிட, பல ஆண்டுகள் கழித்துதான் கொண்டாடப்படுகிறது. படம் வெளியாகி 13ஆண்டுகள் ஆனாலும் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தை, இப்போது டிவியில் போட்டாலும் ரசிக்கலாம்.