அமரன் திரையிட்ட திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஓடி வந்த காவல்துறை.. எங்கே நடந்தது? முழு விபரம் என்ன?
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், ஓடும் திரையரங்கில் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி சென்று இருக்கின்றனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த திரையரங்க நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து வந்த போலீசார் திரையரங்கின் சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன பிரச்சினை
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். ராணுவத்தில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.