8 Years of Bahubali : பாகுபலியை கொன்றது யார்? என்ற சஸ்பென்ஸ் வைத்து, ஒரு நீண்ட இடைவேளை விட்ட படம் பாகுபலி - தி பிகினிங்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8 Years Of Bahubali : பாகுபலியை கொன்றது யார்? என்ற சஸ்பென்ஸ் வைத்து, ஒரு நீண்ட இடைவேளை விட்ட படம் பாகுபலி - தி பிகினிங்!

8 Years of Bahubali : பாகுபலியை கொன்றது யார்? என்ற சஸ்பென்ஸ் வைத்து, ஒரு நீண்ட இடைவேளை விட்ட படம் பாகுபலி - தி பிகினிங்!

Priyadarshini R HT Tamil
Published Jul 10, 2023 04:45 AM IST

8 Years of Bahubali : எட்டு ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் இந்தப்படம் நினைவில் நிற்பதற்கு காரணம், இந்தப்படத்தின் இயக்கம், கதை, விஷீவல் எபெஃக்ட்ஸ், சினிமோட்டோகிராஃபி, தீம்கள், சண்டைக்காட்சிகள், இசை, நடிப்பு என அனைத்தும் நன்றாக இருந்ததால்தான்.

பாகுபலி - 1 பட போஸ்டர்
பாகுபலி - 1 பட போஸ்டர்

பாகுபலி புராண கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தப்படத்தை தெலுங்கின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம். பிரபாஸ், அனுஷ்கா இந்தப்படத்தில் நன்றாக நடித்திருப்பார்கள். அவர்கள் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்.

பாகுபலி தி பிகினிங்கில், கதை, ரம்யாகிருஷ்ணன் ஒரு குழந்தையுடன் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு, அந்த குழந்தையை காப்பாற்றும் படி இறைவனிடம் வேண்டிவிட்டு, நீரில் முழ்கும் காட்சியில் துவங்கும். அந்த குழந்தை அந்தப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும். அதில் குழந்தை இல்லாத ரோகிணி, பொன்வன்னன் தம்பதிகள் எடுத்து வளர்ப்பார்கள். அந்தக் குழந்தை தான் பிரபாஸ்.

அவன் வளர்ந்து அவனது வீட்டிற்கு அருகில் உள்ள அருவியில் ஏறிவிடவேண்டும் என்று துடிப்பார். அதற்கான தொடர் முயற்சியில் ஈடுப்பட்டு மலையேறிச்செல்வார். அங்கு அவர் தமன்னாவை சந்திப்பார். அவருடன் காதல் வயப்படுவார். தமன்னா ஒரு போராளியாக அங்கு இருப்பார். தமன்னாவின் போராட்டத்தில் கலந்துகொள்வதாக பிரபாஸ் உறுதி கொடுப்பார் அதற்கான தேடலின்போதுதான், அவர் யார் என்றும், யாருக்காக போராடுகிறார் என்பதும் தெரியவரும். இதுதான் முதல் பாகத்தில் உள்ள கதை.

பிரபாஸின் நடிப்பு மற்றும் படு கவர்ச்சியான உடற்கட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும். பாகுபலியின் கதை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியது. அவர் தொடர்ந்து படித்த சந்தா மாமா, அமர் சித்ரா, மஹாபாரதம் ஆகிய கதைகளில் இருந்து இவருக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இந்தப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருப்பார்.

இந்தப்படம் பிரமாண்டம், நடிப்பு, கதை என அனைத்து அம்சங்களுக்காகவும் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இந்தப்படம் 180 கோடி ரூபாய்க்கு படமாக்கப்பட்டது. இது இந்தப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இந்திய சினிமாவிலே அதிக பட்ஜெட் படமாக இருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரிஜினல் வெர்ஷனிலும், இந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்படும் வெளியானது. படம் சிறந்த வெற்றி பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. 650 கோடி ரூபாயை கடந்து இந்தப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.

எட்டு ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் இந்தப்படம் நினைவில் நிற்பதற்கு காரணம், இந்தப்படத்தின் இயக்கம், கதை, விஷீவல் எபெஃக்ட்ஸ், சினிமோட்டோகிராஃபி, தீம்கள், சண்டைக்காட்சிகள், இசை, நடிப்பு என அனைத்தும் நன்றாக இருந்ததால்தான், அதைவிட முக்கியமாக பாகுபலியை கொன்றது யார் என்ற சஸ்பென்ஸ் வைத்து அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப்படம் மேலும் அதிகரித்ததுதான்.