கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!

கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!

Suguna Devi P HT Tamil
Updated Apr 17, 2025 09:37 AM IST

2024 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படங்களுக்கான கேரள மாநில விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வான அனைத்து கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!
கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!

நிகழ்ச்சி

இயக்குநர் ஷாஜி என் கருணுக்கு மாநில அரசின் மிக உயர்ந்த திரைப்பட விருதான ஜே.சி. டேனியல் விருதையும் முதல்வர் வழங்கினார் . மேலும் பிரித்விராஜ் சுகுமாரன், ஊர்வசி, பிளெஸ்ஸி, விஜயராகவன், ரெசுல் பூக்குட்டி, வித்யாதரன், ஜியோ பேபி, ஜோஜு ஜார்ஜ், ரோஷன் மேத்யூ மற்றும் சங்கீத் பிரதாப் உள்ளிட்ட 48 திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்டீபன் தேவஸியின் இசைக்குழுவான 'சாலிட் பேண்ட்' இசை நிகழ்ச்சி நடைபெறும்.

விருது வாங்கிய நடிகர்கள்

நடிகர் பிருத்விராஜிற்கு ஆடு ஜீவிதம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் உள்ளொழுக்கு படத்திற்காக நடிகை ஊர்வசி சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். சிறந்த படமாக காதல் தி கோர் படம் விருது பெற்றது. மேலும் ஆடுஜீவிதம் -படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை பிளெஸ்ஸி பெற்றார். சிறந்த இரண்டாவது படமாக இரட்ட படம் விருது பெற்றது. பூக்காலம் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதினை விஜய்ராகவனும், சிறந்த அறிமுக இயக்குநர் விருதை தடவு படத்திற்காக இயக்குனர் பஜில் ரஜாகும் பெற்றனர்.

பினராயி விஜயனின் பதிவு

விருது நிகழ்ச்சி குறித்து கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைத்தளத்தில் பதிவை பதிவித்துள்ளார். இது குறித்த பதிவில், “மாநில திரைப்பட விருது வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கலைஞரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராக கலை உலகம் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டிய நேரம். இது ஒரு கலைஞரின் சுய வெளிப்பாடு, ஒரு சமூகத்தின் கலாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் விமர்சனத்திற்கான ஒரு வழிமுறையாகும். அந்த சாராம்சத்துடன், மலையாள சினிமாவிலிருந்து இன்னும் சிறந்த திரைப்படப் படைப்புகள் வெளிவர வேண்டும். இந்தத் திரைப்பட விருதுகள் நம்மை அவ்வாறு செய்ய ஊக்குவிக்கட்டும், ஊக்கப்படுத்தட்டும். மலையாள சினிமா இன்னும் உயரங்களை எட்டட்டும். திரைப்படத் திறமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார். எம்புரான் l 2 படக் காட்சிகளுக்கு எதிராக எழுந்த சர்ச்சைக்கு இதன் மூலம் பதில் அளித்துள்ளார். விருது பெற்ற நடிகர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.