Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!

Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!

Marimuthu M HT Tamil
Jan 16, 2025 07:26 AM IST

Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!

Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!
Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!

யார் இந்த விஜய் சேதுபதி?:

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 1978ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் நாள் பிறந்தவர். அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, விஜய் சேதுபதியின் குடும்பம் சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்டது. பின் தனது படிப்பை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர் மேல்நிலைப் பள்ளியிலும், லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். படிப்பு மற்றும் விளையாட்டு என இருதுறைகளிலும் விஜய்சேதுபதி சுமாராக படிக்கும் மாணவர் என பல நேரங்களில் தன் பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பின் சென்னை - துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில் பி.காம் முடித்தார். பின்,குடும்பத்தில் இருந்த கடனை அடைக்க துபாய்க்கு சென்று, அங்கு ஒரு அக்கவுன்டன்ட் ஆக பணிபுரிந்தார்.

ஆன்லைனில் பழகியவருடன் திருமணம்:

அங்கு பணிசெய்யும்போது தனது மனைவி ஜெஸ்ஸியுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டு, 2003ல் இந்தியா திரும்பியதும் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர்.

இந்தியா திரும்பியதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து இண்டீரியர் டெக்கரசேன் தொழிலை செய்தபோது, கூத்துப்பட்டறை என்னும் நடிப்புப் பள்ளி பற்றிய அறிவிப்பினை பார்க்கிறார். பின் கூத்துப்பட்டறையில் 2006ஆம் ஆண்டு கணக்காளராகப் பணியில் இணைகிறார். அங்கு நடிப்பு கற்றுக்கொள்ள வருபவர்களின் அசைவுகளைக் கண்காணிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு நாளைய இயக்குநர் தந்த திருப்புமுனை:

சினிமாவில் கூட்டத்தில் தோன்றும் துணைநடிகர் கதாபாத்திரங்கள், சீரியல்கள், டப்பிங் பேசுதல் என சுற்றி சுழன்று சினிமா சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தார், விஜய் சேதுபதி. அப்படி கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் என்னும் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது, நடிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் குறும்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அது விஜய் சேதுபதிக்கு ஒரு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை பாய்ச்சியது.

இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் ஹீரோவாக சட்டென தேர்வு செய்யப்பட்டார், விஜய் சேதுபதி. தான் தேர்வு ஆன அன்றே படத்தின் பைன்டட் ஸ்கிரிப்ட்டைப் படித்து, படத்தில் தான் எவ்வாறு நடிக்க வேண்டும் என்று யோசித்து வைத்துக்கொண்டார், விஜய்சேதுபதி. திரையிலும் அது மிளிர்ந்தது.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் மூலம் அடுத்தடுத்து ஹிட்:

அடுத்து நாளைய இயக்குநரில் இருந்து வெளியில் வந்த வருங்கால இயக்குநரின் முதல் தேர்வுக்குரிய நடிகராக மாறினார், விஜய் சேதுபதி. அப்படி நாளைய இயக்குநரில் பணிபுரிந்த கார்த்திக் சுப்புராஜூடன் 'பீட்சா’, பாலாஜி தரணிதரனின் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, நலன் குமாரசாமியின் ’சூது கவ்வும்’, எஸ்.யு.அருண்குமாரின் ’பண்ணையாரும் பத்மினியும்’ ஆகியப் படங்களில் இடைவெளி இல்லாமல் நடித்து முக்கிய நடிகராக, தமிழ் சினிமாவில் வளரத் தொடங்கினார்.

தவிர, இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’படம், அவரது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புக்காக பாராட்டப்பட்டது மட்டுமின்றி, மிகப்பெரிய ஹிட்டானது. அதன்பின் விஜய்சேதுபதி ’ரம்மி’ எனும் படத்தில் நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற ’கூடை மேல கூட வைச்சு’ என்னும் பாடல் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டும் சேர்த்தது.

பின் நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, கவண், விக்ரம் வேதா,96, மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை பாகம் 1 ஆகியப் படங்கள், இவரது நடிப்பில் ஹிட் படங்களாக அமைந்தன.

பிற ஹீரோக்களுடன் நடித்த விஜய்சேதுபதி:

தவிர, மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ் ஆகியப் படங்களில் பல நடிகர்களுடன் சேர்ந்தும்; பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாகவும்; விக்ரம் படத்தில் கமல்ஹாசனை எதிர்க்கும் நபராகவும், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் நடித்தார், விஜய்சேதுபதி.

பிறமொழிப்படங்களிலும் கலக்கிய விஜய்சேதுபதி:

இது ஒருபுறம் இருக்க மார்கோனி மத்தாய் என்னும் ஜெயராமின் மலையாளப் படத்திலும்; சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி என்னும் தெலுங்கு படத்திலும் நடித்தார். மேலும் ‘உப்பெனா’என்னும் தெலுங்கு படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாகவும் நடித்து மிரட்டியிருப்பார்,விஜய்சேதுபதி.

2023ஆம் ஆண்டு விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியான இந்தி படமான மும்பைகர், இவருக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பாலிவுட்டில் பெற்றுத்தந்தது. பின் விஜய்சேதுபதியும் கத்ரீனா கைஃபும் மேரி கிறிஸ்துமஸ் என்னும் படத்தில் நடித்திருந்தனர். விஜய்சேதுபதியின் 50ஆவது படமான மஹாராஜா மிகப்பெரிய ஹிட்டானது. அடுத்து விடுதலை பகுதி 2ஆவது படம் வெளியானது.

ஒருமுறை சினிமாவுக்கு வாய்ப்புத் தேடும்போது, தனது தலையில் முடி நடித்ததைப் பார்த்த விஜய்சேதுபதி, பரவாயில்லையே இனிமேல் தன்னை ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்க அணுகுவார்கள் என நினைத்துக்கொண்டாராம். அந்த அணுகுமுறைக்கே இன்னும் விஜய்சேதுபதி, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.