விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

Suguna Devi P HT Tamil
Dec 09, 2024 03:12 PM IST

இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் சிங்கம், வேல் போன்ற படங்கள் உருவாகியுள்ளன. இவர்களது கூட்டணிக்கு அடித்தளமாக இருந்தது 2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஆறு படம்.

விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!
விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

ஹரியின் திரைக்கதை

அதிரடி திரைக்கதை என்றால் அது இயக்குனர் ஹரி என்ற பெயர்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவரது அனைத்து படங்களிலும் திரைக்கதை அதிரடியாக நகரும். மேலும் எந்த தொய்வும் ஏற்படாத வண்ணம் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளுடன் படத்தை நகர்த்தி இருப்பார். இந்த வரிசையில் “ஆறு” படமும் மிகவும் அதிரடியான திரைக்கதையுடனும், வேகமாக நகரும் கதைக்களத்துடனும் அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

 மேலும் மௌனம் பேசியதே படத்திற்கு பின்னர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ஆறு திரைப்படம் அவர்களின் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து முழுதாக எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இருவருக்கும் இடையே வரும் காதலும் அதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் அற்புதமாக அமைந்தது. 

 வெடித்து சிதறிய வடிவேலுவின் நகைச்சுவை 

இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் எந்த அளவிற்கு பங்கு வைத்ததோ அதே அளவிற்கு வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளும் பங்கு வைத்தது சுண்டி மோதிரம் என்ற பெயரை சுருக்கி சுமோ என்ற பெயருடன் மிகவும் அசத்தலான காமெடி காட்சிகளுடன் படம் அதிரபுத்தியாக வெளியாகி இருந்தது. இந்த காட்சிகள் இன்று வரை ரசிகர்களின் மனதில் ஆழப்பரிந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் காவலாளியாக வரும் கலாபவன் மணியும் சிறப்பாக காமெடி செய்திருப்பார். இவரது காமெடி வசனங்களும் தற்போது வரை பிரபலமாக இருந்து வருகிறது. 

ஆறு படத்தின் கதை 

ஆறு படத்தில் முழுக்க ரவுடிகளாக இருக்கும் பின்னணி கொண்ட கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. இப்படத்தில் அனாதை சிறுவனாக இருக்கும் ஆறு (சூர்யா) விஷ்வநாதன் என்பவருக்கு அடியாளாக வேலை பார்க்கிறார். அவரது தம்பி கல்லூரியில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் போதும் அவரை கல்லூரியின் சக மாணவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார். மேலும் த்ரிஷாவை கடத்தி செல்லும் ரவுடிகளிடம் இருந்து த்ரிஷாவை காப்பாற்ற தன் கழுத்தில் இருக்கும் செயினை போட்டு தன் மனைவி எனக் கூறி காப்பாற்றுகிறார். பின்னர் த்ரிஷாவிற்கு சூர்யா மீது காதல் வருகிறது. 

விஷ்வநாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வநாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.