17 Years Of Paruthiveeran: ‘கல்லும் மண்ணும் காதல் செய்யும்.. மனிதனுக்கு வராதா?’ பஞ்சு போன்ற பாறை மனிதன் பருத்தி வீரன்!
பருத்திவீரன் படத்தை இயக்கிய போது படத்தை சொன்ன தேதியில் இயக்குநர் அமீர் முடித்து கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பருத்தி வீரன் நடிகர் கார்த்திக்கின் முதல் படம். வசூலில் சக்கை போடு போட்ட பருத்தி வீரன் திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டும் பிப்ரவரி 23ம் தேதி வெளியானது. இன்றோடு படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை திரும்பி பார்க்கலாம். ‘கல்லும் மண்ணும் காதல் செய்யும்.. மனிதனுக்கு வராதா?’ பஞ்சு போன்ற பாறை மனிதன் பருத்தி வீரன் குறித்து இங்கு பார்க்கலாம்.
நடிகர்கள்
இயக்குநர் அமீரின் 3 ஆவது படம் பருத்தி வீரன். படத்தில் நடிகர் சிவக்குமாரின் மகனான கார்த்திக்கை அறிமுக நடிகராக தேர்ந்தெடுத்தார் அமீர். நடிகை பிரியாமணி முத்தழகு கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். முத்தழகின் தாயாக சுஜாதாவும், தந்தையாக பொன்வண்ணனும் நடித்திருந்தனர்.
பருத்தி வீரனின் சித்தப்பாவாக நடிகர் சரவணன் செவ்வாழை காதப்பாத்திரத்தில் நடித்திருந்தார். டக்ளஸ் ஆக கஞ்சா கருப்பு, பொணந்திந்திண்ணியாக செவ்வாழை ராசு என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.