Prabhu Deva : 100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prabhu Deva : 100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!

Prabhu Deva : 100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published May 02, 2024 01:02 PM IST

Prabhu Deva : திரையில் பேசிய பிரபு தேவா நான் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மீட் பண்ண வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்த மாதிரி என் லைப்ல நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கிட்டு வராம இருந்ததே இல்லை. இது தான் பஸ்ட் டைம். அதனால் இதை எப்படி அட்ரஸ் பண்றதுனு தெரியல. ஹெல்த் இஸ்யூவால அப்படி ஆகிடுச்சு என்றார்.

100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை  சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!
100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!

இந்திய மைக்கேல் ஜாக்சன்

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. அவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் வேலை செய்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனராக இருந்த பிரபு தேவாவுக்கு நடனத்தின் மீது காதல் இருந்தது. பிரபு தேவா பின்னர் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு மேற்கத்திய நடன வடிவங்களைக் கற்றுக் கொண்டார், இறுதியில் 1990 ஆம் ஆண்டு நடன இயக்குநராக இருந்த பிரபு தேவா நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

எப்போதும் பிரபுதேவாவின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

நடன நிகழ்ச்சி

சென்னையில் விஎஸ் ராக்ஸ் அமைப்பு சார்பாக சர்வதேச நடன தினத்தை யொட்டி பிரபு தேவாவிற்கு அர்பணிப்புக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நமது மாஸ்டர் நமது முன்னோடி என்ற பெயரில் 100 நிமிடங்கள் தொடர்ந்து பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் வகையில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபுதேவா வர இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையல் அவர் வருதற்கு கால தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. இதனால் மாணவர்கள் வெயிலில் நிற்க வைக்கப்பட்ருந்தனர்.

இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு வெறும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டு நடந்ததாக கூறப்படுகிறது

திரையில் பேசிய பிரபுதேவா

இந்த நிலையில் இது குறித்து பிரபுதேவா திரையில் தோன்றி பேசினார். கூறுகையில் ‘நான் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மீட் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இந்த மாதிரி என் லைப்ல நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கிட்டு வராம இருந்ததே இல்லை. இது தான் பஸ்ட் டைம். அதனால் இதை எப்படி அட்ரஸ் பண்றதுனு என தெரிய வில்லை. ஹெல்த் இஸ்யூவால அப்படி ஆகிடுச்சு உங்கள் எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக்.. ஐ லவ்யூ ஆல்.. ஐ மிஸ் யூ ஆல்' என்றார். இதனால் பெற்றோர்கள் இப்படி சுட்டெரிக்கும் வெயிலில் காக்க வச்சு ஏமாற்றி விட்டார்களே என்று புலம்பிய படி சென்றனர்.

பல ஆண்டுகள் கடந்தும் ஊர்வசி ஊர்வசி, முக்காலா முக்காபுலா, வெண்ணிலவே வெண்ணிலவே என பிரபு தேவாவின் நடனத்தை இன்றும் ரசித்தவர்கள் அவரது செயலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.