Parliament Election 2024: ’மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே ராமரின் விருப்பம்!’ யோகி ஆதித்யநாத் பேச்சு!
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராமரின் விருப்பம்: ஆதித்யநாத்
’மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே ராமரின் விருப்பம்!’ யோகி ஆதித்யநாத் பேச்சு! (REUTERS)
நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் ராமரின் விருப்பம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவை தொகுதியில்களில் நடைபெற்ற பேரணிகளில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ராமரின் துரோகிகள் அல்லது பாகிஸ்தானியர்கள் மட்டுமே மோடியை எதிர்க்கின்றனர். பாகிஸ்தானுடன் ராகுல் காந்தியின் உறவு எப்படி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் இந்தியாவில் வசிக்கிறார், ரேபரேலியில் வாக்கு கேட்கிறார், பாகிஸ்தானின் ஆதரவைப் பெறுகிறார்.
