Rahul Gandhi: ‘மோடிக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்னை இல்லை!’ கோவையில் மோடியை விளாசிய ராகுல் காந்தி!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Rahul Gandhi: ‘மோடிக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்னை இல்லை!’ கோவையில் மோடியை விளாசிய ராகுல் காந்தி!

Rahul Gandhi: ‘மோடிக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்னை இல்லை!’ கோவையில் மோடியை விளாசிய ராகுல் காந்தி!

Kathiravan V HT Tamil
Published Apr 12, 2024 08:36 PM IST

”இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல; உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அதானியின் அரசு”

கோவையில் ராகுல் காந்தி பிரச்சாரம்
கோவையில் ராகுல் காந்தி பிரச்சாரம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நான் தமிழக மக்களை மிகவும் அன்புடன் நேசிகின்றேன். உங்கள் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும். நரேந்திர மோடி அரசு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல; உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அதானியின் அரசு. 

துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவற்றை அதானி விரும்பினால் அதை மோடி தந்துவிடுகிறார். அவர் மும்பை விமான நிலையத்தை விரும்பினார், சிபிஐ விசாரணைக்கு பிறகு சில நாட்களில் மும்பை விமான நிலையம் அதானி கைக்கு சென்றது. அவர் எது வேண்டும் என நினைக்கிறாரோ அதை பெற்றுக் கொள்கிறார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய உடன் எனது எம்பி பதவி பறிக்கப்பட்டது.  நான் குடியிருந்த வீட்டையும் அவர்கள்  பறித்தார்கள். எனக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான வீடுகள் உங்கள் இதயங்களில் உள்ளது. 

எனக்கும் உங்களுக்கும் அரசியல் உறவு அல்ல; எனக்கும் உங்களுக்கும் குடும்பரீதியான உறவு உள்ளது. உங்கள் நாகரீகம் மிகவும் தொன்மையானது யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். 

யார் நம்மிடம் உண்மையாக பேசுகிறார்கள் என்பதை நீங்கள் முடிவு செய்துவிடுவீர்கள். பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் போன்ற தலைவர்கள் தங்கள் அறிவாற்றல் மூலம் மக்கள் மனதில் இடம்பெற்று உள்ளனர். அவர்கள்தான் உண்மையான தலைவர்கள். 

எங்கள் மொழி, வரலாறு, பாரம்பரியத்தை ஏன் அவதூறாக பேசுகிறார்கள். நீங்கள் இங்கு வந்து தோசை பிடிக்கும் என்று சொல்கீறீர்கள், டெல்லி சென்ற பிறகு ஒரு தேசம், ஒரு தலைவர், ஒரு மொழி என்று பேசுகிறீர்கள். ஏன் ஒரு மொழி இருக்க வேண்டும். ஏன் தமிழ், வங்காளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடம் இல்லை. இங்கு வந்து தோசை பிடிக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் இந்த மொழியை அவதூறு செய்கிறீர்கள். 

உங்களுக்கு தோசை மட்டுமல்ல, வடை கூட பிடிக்கலாம். ஆனால் அது பிரச்னை இல்லை. உங்களுக்கு தமிழை பிடிக்குமா என்பதுதான் இங்கு பிரச்னை.

எனது மூத்த அண்ணன் ஸ்டாலின், நான் எப்படி யாரையும் அழைப்பது இல்லை. அவர் இங்கு பேசும் போது தேர்தல் பத்திர ஊழல் குறித்து பேசினார். பாஜக சலவை மெஷினை இயக்குகிறது. 

22 இந்திய பணக்காரர்கள் 70 கோடி மக்களின் செல்வத்தை கொண்டு உள்ளனர். 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திட்டாண்ட பிர்ச்சையை தீர்ப்போம். அரசு வேலைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணிகளை நாங்கள் நிரப்புவோம். இளைஞர்கள் தனியார் நிறுவனத்தில் அப்ரண்டிசிப் அளிக்கப்பட்டு ஊக்கத் தொகை தரப்படும். அப்ரண்டிப் சிப் சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். 

தமிழக மக்களின் மிகப்பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. உங்களுக்கு நீட் வேண்டுமா?; வேண்டாமா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நாங்கள் தருவோம். 16 லட்சம் கோடி வங்கி கடன்களை பெரிய முதலாளிகளுக்கு மோடி தந்துள்ளார். ஆனால் நாங்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்போம். 

நரேந்திர மோடி மற்றும் அதானியின் கொள்கைகள் இரண்டு இந்தியாவை உருவாக்கி உள்ளது. அதில் ஒரு இந்தியா பணக்கார இந்தியாவாகவும், இன்னொன்று ஏழை இந்தியாவாகவும் உள்ளது. 

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஆண்டுக்கு கொடுப்போம் என ராகுல் காந்தி பேசினார்.