PM Modi in Salem: சேலத்தில் ஆடிட்டர் ரமேஷை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!-யார் அந்த ஆடிட்டர் ரமேஷ்? அறிய படிக்கவும்
PM Modi in Salem: ஆடிட்டர் ரமேஷ் குறித்து பிரதமர் பேசியபோது கூட்டத்தினர் சில நொடிகள் அமைதியாக இருந்தனர், பின்னர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தனது உரையை மீண்டும் தொடங்கிய பிரதமர் மோடி, "துரதிர்ஷ்டவசமாக, சேலத்தைச் சேர்ந்த நமது ரமேஷ் நம்மிடையே இன்று இல்லை" என்று கூறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்ட மறைந்த பாஜக தலைவர் நினைவஞ்சலியாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தனது உரையை சிறிது நேரம் நிறுத்தினார்.
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மறைந்த பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் உட்பட மாவட்டத்துடன் தொடர்புடைய மூன்று பிரமுகர்களை நினைவு கூர்ந்தார்.
ஆனால், 'ஆடிட்டர்' ரமேஷ் பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
"இன்று, நான் ஆடிட்டர் ரமேஷை நினைவு கூர்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது உரையை ஒரு நிமிடம் இடைநிறுத்துவதற்கு முன்பு கூறினார்.
கூட்டத்தினர் சில நொடிகள் அமைதியாக இருந்தனர், பின்னர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
தனது உரையை மீண்டும் தொடங்கிய பிரதமர் மோடி, "துரதிர்ஷ்டவசமாக, சேலத்தைச் சேர்ந்த நமது ரமேஷ் நம்மிடையே இன்று இல்லை" என்று கூறினார்.
"ரமேஷ் கட்சிக்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்தார், அவர் ஒரு நல்ல பேச்சாளர். ஆனால் அவர் கொல்லப்பட்டார்" என்று மறைந்த பாஜக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் போது அவர் மேலும் கூறினார்.
'ஆடிட்டர்' ரமேஷ் யார்?
ஆடிட்டர் வி.ரமேஷ், சேலம் மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர். 52 வயதுடையவராக இருந்தபோது அவர், ஜூலை 19, 2013 அன்று அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் அவரது வீட்டின் அருகே கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டார். அவர் இரவு 9 மணியளவில் கட்சி விவகாரங்களைப் பற்றி விவாதிக்க தனது அலுவலகத்திற்குச் சென்றதாகவும், தனது இல்லத்திற்குத் திரும்பும்போது நான்கு பேரால் தாக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து இந்த கொலை குறித்து விசாரித்தார்.
இந்த சம்பவம் பிராந்தியத்தில் பதட்டங்களை ஏற்படுத்தியது, எதிர்ப்பாளர்கள் ஐந்து அரசு பேருந்துகள் மீது கல்வீசினர் மற்றும் அதிகாரிகள் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்க வேண்டியிருந்தது.
அக்டோபர் 2013 இல், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி, திருச்சியில் நடந்த பேரணியின் போது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி எதுவும் பேசவில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் அப்போது கூறுகையில், மாநில அரசு மீது மோடி அதிருப்தி அடைந்துள்ளார் என்று தெரிவித்து இருந்தனர்.
மறைந்த லட்சுமணன் தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்புகளையும் சேலத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
"அவசரகால எதிர்ப்பு இயக்கம் மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்றதில் லட்சுமணனின் பங்கு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். மாநிலத்தில் பாஜகவின் விரிவாக்கத்திற்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளைத் தொடங்கினார்' என்று பிரதமர் மோடி கூறினார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் வந்து கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

டாபிக்ஸ்