MDMK: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில்! துரை வைகோவின் அடுத்த முடிவு என்ன?
MDMK: ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MDMK: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது எனற இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீருக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில்தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.