Rajnath Singh: சனாதனத்தை அவமதித்த உதயநிதியை மன்னிக்க முடியுமா? திருவாரூரில் ராஜ்நாத் சிங் ஆவேசம்!
”பா.ஜ.,வை எதிர்க்கும் போது, இந்திய கூட்டணி தலைவர்கள், இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் அவமதிக்க துவங்கி உள்ளனர்”

ராஜ்நாத் சிங் பரப்புரை
சனாதனத்தை அழிப்போம் என்று பேசிய உதயநிதியை மன்னிக்க முடியுமா? என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.