Election Survey 2024: டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக்கணிப்பு - 64 விழுக்காடு பேர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்
டெய்லி ஹன்ட்டின் ஆன்லைன் வாக்கெடுப்பில் 77 லட்சம் குரல்கள் பங்கேற்றுள்ளன. தேசிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் தலைமை குறித்து 63.6% பேர் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பு - 64 விழுக்காடு பேர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்
Election Survey 2024: டெய்லிஹன்ட், மக்களவைத்தேர்தல் 2024 தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
"Trust of the Nation 2024"என்ற பெயரில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் முக்கிய பிராந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் Dailyhunt, தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியது.
77 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களிடமிருந்து இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் கணிக்கப்பட்டுள்ளன. இது 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் மதிப்புமிக்க நுண்ணறிவான கருத்துக் கணிப்பாகும்.