டபிள்யூபிஎல் 2025: கடைசி ஓவரில் சிக்ஸர் மழை! வெற்றி அருகே சென்று கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபிக்கு ஆறுதல்
டபிள்யூபிஎல் 2025: கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 16 ரன்கள் குவித்தது. வெற்றியை நெருக்க வந்த போதிலும் தோல்வியை தழுவிதால் நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை கோட்டை விட்டது.

டபிள்யூபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனின் கடைசி லீக் போட்டியாக இது அமைந்திருந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆர்சிபி மகளிர் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆர்சிபி மகளிர் அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் தனது முந்தைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்சிபி அணி யுபி வாரியர்ஸ்க்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி மகளிர 199 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் சேஸிங்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட் செய்த ஆர்சிபி மகளிர் மந்தனா 53, எல்லீஸ் பெர்ரி 49 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 என மிக பெரிய ஸ்கோரை எடுத்தது. சவாலான இந்த இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி மகளிர் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியின் அதிகபட்சமாக பார்மில் இருந்து வரும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 69, ஹர்மன்ப்ரீத் கெளர் 20 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி மகளிர் பவுலர்களில் ஸ்னேக் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிம் கார்த்,எல்லீஸ் பெர்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ஹீத்தர் கிரஹாம், ஜார்ஜியா வேர்ஹம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மும்பை பேட்டிங்கில் ஏமாற்றம்
இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்த இந்த போட்டியில், 200 ரன்கள் என்கிற மிக பெரிய இலக்கை விரட்டுவதற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு அதிரடியான தொடக்கம் அமையாமல் போனது. ஓபனர்களான ஹேய்லீ மேத்யூஸ் 19, அமெலியா கெர் 9 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் பின்னர் பேட் செய்த பிரண்ட், நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அடுத்தடுத்து பவுண்டரிகளாக வெளுத்து வாங்கிய பிரண்ட், சிக்ஸர்களும் பறக்கவிட்டார். 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்த பிரண்ட் 35 பந்துகளில் 69 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
இவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 20, அமன்ஜோத் கெளர் 17 ரன்கள் அடித்தனர்.
மேலும் படிக்க: முதலில் பேட்டிங் பின்னர் பவுலிங்கில் தாண்டவமாடிய பிரண்ட்
சஞ்சனா அதிரடி
கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சனா 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்த போதிலும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பெரிய ஷாட் முயற்சியில் அவுட்டானார். இந்த போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதல் இடத்தில் இருக்கும் டெல்லியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடும்.

டாபிக்ஸ்