ஐபிஎல் 2025: அதிரடி தொடக்கம்.. Class பேட்டிங்.. சிஎஸ்கே அணியின் புதிய நம்பிக்கை! யார் இந்த ஷேக் ரஷீத்?
ஐபிஎல் 2025: இரண்டு சீசன்களாக பெஞ்சில் அமரவைக்கப்பட்ட இளம் பேட்ஸ்மேனான ஷேக் ரஷீத், சிஎஸ்கே அணிக்காக முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய அவர் விரைவாக 27 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தார்.

ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இதுவரை விளையாடி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் முதல் போட்டியில் வெற்றி அதன் பிறகு 5 தோல்வி பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.
இந்த போட்டியில் சிஎஸ்கே ஓபனராக 20 வயதாகும் இளம் வீரர் ஷேக் ரஷீது அறிமுக வீரராக சிஎஸ்கே அணியில் களமிறங்கினார். மற்றொரு ஓபனரான ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்த ரஷீத், 4.5 ஓவரில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீத் 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டானார்.
