ஐபிஎல் 2025: மும்பை அணியின் வெற்றி பாதை.. மற்ற அணிகள் அச்சப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: மும்பை அணியின் வெற்றி பாதை.. மற்ற அணிகள் அச்சப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா

ஐபிஎல் 2025: மும்பை அணியின் வெற்றி பாதை.. மற்ற அணிகள் அச்சப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 28, 2025 01:59 PM IST

மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பாதையில் இருந்தால், மற்ற அணிகள் அனைவரும் அச்சப்பட வேண்டும் என்று பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். தொடர் வெற்றிகளை பெற்று வரும் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் வெற்றி பாதை.. மற்ற அணிகள் அச்சப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா
மும்பை அணியின் வெற்றி பாதை.. மற்ற அணிகள் அச்சப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா

ஜியோஹாட்ஸ்டாரில் கூல் ஃபேன்ஸ் மேட்ச் சென்டர் லைவில், ஜியோஸ்டார் நிபுணர் பியூஷ் சாவ்லா, மும்பை இந்தியன்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எளிதாக வென்றதும், ஆர்சிபி அணி டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது குறித்தும் தனது பார்வையை பகிர்ந்தார்.

அவரது உரையில் அவர் சிறந்த ஆட்டக்காரர்களின் செயல்திறன், போட்டியை மாற்றிய தருணங்கள் மற்றும் அணிகள் கடைபிடித்த முழுமையான உத்திகளை விரிவாக விளக்கினார்.

மும்பை இந்தியன்ஸ் பற்றி பியூஷ் சாவ்லா கூறியதாவது: “மும்பை இந்தியன்ஸ் அணியில் எத்தனை மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்பதை காணும்போது, ஆரம்பத்திலிருந்து 11வது வீரர் வரை பார்க்க முடியும். ரியான் ரிக்கில்டன் விளையாடிய அட்டகாசமான இன்னிங்ஸ், கடந்த இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா செய்த சாதனை, பும்ரா பந்து வீச்சில் செய்த தாக்கம் என இதையெல்லாம் பார்க்கும்போது தெரிகிறது.

மற்ற அணிகள் அச்சப்படும்

வில் ஜாக்ஸும் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். இந்த அணியின் இயல்பே இதுதான். ஏற்கனவே பல மேட்ச் வின்னர்கள் உள்ளார்கள். பும்ரா இம்பாக்ட் பிளேயராக வந்தார்; அவர் போட்டியில் ஏற்படுத்திய தாக்கம் நம்மால் பார்க்க முடிந்தது. அதனால்தான் மும்பை இந்தியன்ஸ் இப்போது வெற்றிப் பாதையில் இருக்கிறது. அவர்கள் இப்படிச் செல்லும்போது, மற்ற அணிகள் எல்லாம் அச்சப்பட வேண்டும்."

ஆர்சிபி அணியின் வெற்றி பற்றி பியூஷ் சாவ்லா கூறியதாவது: "ஆர்சிபி சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது, அதற்கு அணிக்கு முழு பாராட்டு சொல்ல வேண்டும். அவர்கள் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. பழைய பந்தை வைத்து புவனேஷ்வர் குமார் என்ன மாயாஜாலம் செய்வார் என்பதைக் பார்த்தோம். அவர் வீசிய இரண்டு ஓவர்களும் மிக முக்கியமானவை. முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். கடினமான பீட்சில் சேஸிங் செய்யும்போது, விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் பெற்றது. அணி ஒரு கட்டத்தில் மிகவும் அழுத்தத்தில் இருந்தும், இந்த ஜோடி ஆட்டத்தை ஆழமாக எடுத்துச்சென்றனர்.

குறிப்பாக க்ருனால் ரிஸ்க் எடுத்து தேவையான போது பெரிய ஷாட்கள் விளாசினார். இதனால் அணியின் ரன்ரேட் கட்டுக்குள் இருந்தது. இந்த அணி எல்லா அம்சங்களிலும் சிறப்பாக செயல்படுகிறது, அதனால்தான் அவர்கள் வெளியூரிலும் வெற்றி பெறுகிறார்கள்.

க்ருனால் மிடில் ஓவர்களில் ஆபத்தானவர்

க்ருனால் ஸ்பின்னர்களை நன்கு விளையாடக்கூடியவர். அதனால்தான் அவர் மிடில் ஓவர்களில் மிகவும் ஆபத்தானவர். பீட்ச் சவாலானதாக இருந்ததை கோலி கூட குறிப்பிட்டார். இப்படியான சூழலில் க்ருனாலை அதிகம் பாராட்ட வேண்டும். அவர் பொறுப்புடன் ஆடி, சரியான சமயத்தில் ரிஸ்க் எடுத்தார். அதில் பலனும் கிடைத்தது. ஆரம்பத்தில் 30 பந்துகள் வரை செட்டாக பயன்படுத்தினார். அதன் அதிரடிக்கு மாறி ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார்

கோலியின் நங்கூர இன்னிங்ஸ்

அதேபோல் விராட் கோலி 50 ரன்கள் எப்படி எடுத்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் அவரது இன்னிங்ஸ்தான் இரண்டு புள்ளிகளை பெற்று அணிக்கு உதவியது என்பது தான் முக்கியம். அணிக்கு யாராவது நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டும். குறைந்த ஸ்கோர், குறிப்பாக மூன்று விக்கெட்டுகள் இழந்த பிறகு. விராட் அந்த பொறுப்பை சிறப்பாக செய்தார். அவர் அடித்த 51 ரன்கள், புவனேஷ்வர் குமார் வீசிய இறுதி கட்ட ஓவர்களோடு சமமான முக்கியத்துவம் உடையவை. 160–170 ரன்கள் சேஸிங்கை விராட் கோலி சரியாக கணக்கிடுகிறார்

பழைய பந்தை நன்கு பயன்படுத்திய புவனேஷ்வர்

முதல் இன்னிங்ஸில் புவனேஷ்வர் இறுதி ஓவர்களில் வேகம் கொடுக்காமல் பவுலிங் செய்தார். பழைய பந்தைப் பயன்படுத்தி ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். அவர் வீசிய இரண்டு ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது மிக முக்கியமானது. அவர் 20-22 ரன்கள் விட்டிருந்தால், டெல்லி அணி 180 ரன்களை கடந்திருக்கும்." இவ்வாறு பியூஷ் சாவ்லா கூறினார்.

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. ஜெயிப்பூரில் நடைபெறும் இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ரசிக்கலாம்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.