முதல் முறையாக 5 விக்கெட்டுகள்..திருப்பம் தந்த வருண் சக்கரவர்த்தி - பினிஷ் செய்த ஸ்டப்ஸ்
டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி திருப்பம் தந்தார். ஆனால் ஸ்டப்ஸ் தனது அதிரடியால் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

முதல் முறையாக 5 விக்கெட்டுகள்..திருப்பம் தந்த வருண் சக்கரவர்த்தி - பினிஷ் செய்த ஸ்டப்ஸ்
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கெபெர்ஹாவில் நடைபெற்றது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்தியா இந்த போட்டியிலும் விளையாடியது
பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39, அக்ஷர் படேல் 27, திலக் வர்மா 20 ரன்கள் எடுத்தனர்.
