இந்திய ஸ்பின்னர்கள் சுழலில் சுருண்ட தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள்! பவுலிங்கில் வெறித்தனம் காட்டிய வருண் - பிஷ்னோய்
பவுலிங்கில் வெறித்தனம் காட்டிய வருண் - பிஷ்னோய் கூட்டணி. இந்திய ஸ்பின்னர்கள் சுழலில் தாக்குபிடிக்க முடியாமல் சுருண்ட தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களால் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்திய ஸ்பின்னர்கள் சுழலில் சுருண்ட தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள்! பவுலிங்கில் வெறித்தனம் காட்டிய வருண் - பிஷ்னோய் (AP)
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி விளையாடுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இந்தியா, இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யா குமார் யாதவ் 21 ரன்கள் எடுத்தனர்.
