TNPL 2024: புது பெயர்களுடன் 2 அணிகள், களைகட்ட காத்திருக்கும் 8வது ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா
டி.என்.பி.எல் 2024 சீஸனிலும் கேரவன் ஃபார்மட் அடிப்படையில் முதல் லெக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரையும் இரண்டாவது லெக் கோயம்புத்தூரில் ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரையும் மூன்றாவது லெக் போட்டிகள் திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8வது சீஸன் வரும் இன்று பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாநகரங்களில் நடைபெறுகிறது. ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலான இந்த தொடரில் ப்ளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு சீஸன்களைப் போல, டி.என்.பி.எல் 2024 சீஸனிலும் கேரவன் ஃபார்மட் அடிப்படையில் முதல் லெக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரையும் இரண்டாவது லெக் கோயம்புத்தூரில் ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரையும் மூன்றாவது லெக் போட்டிகள் திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் கடைசி லெக் போட்டிகள் திண்டுக்கல்லில் ஜூலை 26 முதல் 28 வரை நடைபெறுவதோடு 2024 சீஸனின் முதல் 2 ப்ளேஆஃப்ஸ் போட்டிகளான குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முறையே ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி திண்டுக்கல் மாநகரத்திலேயே நடைபெறுகிறது. இதில் 2024 சீஸனின் குவாலிஃபையர் 2(ஆகஸ்ட் 2) மற்றும் இறுதிப்போட்டி (ஆகஸ்ட் 4) சென்னை சேப்பாக்கத்தில் 2021ஆம் ஆண்டிற்குப்பின் மீண்டும் நடைபெறவுள்ளது
நேரம் எப்போது?
ஒவ்வொரு போட்டிகளும் இரவு 7.15 மணிக்கும் டபுள் ஹெட்டர் போட்டிகள் இருக்கும் சமயத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படும். மொத்தமாக இந்த சீஸனில் 7 டபுள் ஹெட்டர் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ப்ளேஆஃப்ஸ் போட்டியின் போது மழையால் ஆட்டம் குறுக்கிட்டால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் நடைமுறை சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் பின்பற்றப்படும்.
நோக்கம் என்ன?
இந்தியாவில் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்கிய முதல் மாநிலமான தமிழ்நாட்டில் டி.என்.பி.எல் மூலம் பல உள்ளூர் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களை உலகறியச் செய்வதே இந்த டி.என்.பி.எல் லீக்கின் முக்கிய நோக்கமாகும்
ஒரு மாத காலம் நடைபெறும் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். டி.என்.பி.எல் 2024 சீஸனிலுள்ள 8 அணிகளும் லீக் கட்டத்தில் ஒருமுறை நேருக்கு நேர் மோதுவார்கள். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 1இல் விளையாடும். குவாலிஃபையர் 1இல் வெற்றி பெறுபவர்கள் டி.என்.பி.எல் 2024 இறுதிப்போட்டிக்கு நேரடியாக நுழைவார்கள். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். குவாலிஃபையர் 1இல் தோல்வியடைந்த அணி எலிமினேட்டரின் வெற்றியாளருக்கு எதிராக குவாலிஃபையர் 2இல் மோதுவார்கள் அதில் வெற்றி பெறும் அணிக்கு எதிராக குவாலிஃபையர் 1 வெற்றியாளர் TNPL 2024 இறுதிப்போட்டியின் மாபெரும் பட்டத்திற்கான மோதலில் களமிறங்குவார்கள்
டி.என்.பி.எல் நட்சத்திர வீரர்கள்
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை பல இந்திய ஜாம்பவான்களும் பல தமிழ்நாடு நட்சத்திர கிரிக்கெட்டர்களும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் குறிப்பாக இந்தியாவிற்கு 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 2016 முதல் தற்போது வரை டி.என்.பி.எல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸிற்காக விளையாடி வருகிறார். மேலும் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அபினவ் முகுந்த் போன்ற இந்தியாவிற்காக விளையாடிய முக்கிய கிரிக்கெட்டர்களும் இந்த தொடரில் விளையாடியுள்ளனர்
ஆனால், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் புகழ் வெளிச்சம் கிடைத்து ஐபிஎல் போன்ற உலகின் தலைசிறந்த லீக்கில் விளையாடியதோடு இந்திய அணிக்காகவும் விளையாடிய பல கிரிக்கெட்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எல் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
அதில் முக்கியமாக சேலம் சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் நடராஜன், தற்போது ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன், இந்திய உலகக் கோப்பை அணியில் விளையாடிய விஜய் ஷங்கர், வருண் சக்கரவர்த்தி மற்றும் டி.என்.பி.எல் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற ஐபிஎல்லில் கலக்கி வரும் ஷாரூக் கான், சந்தீப் வாரியார் போன்ற இன்னும் பல எண்ணற்ற வீரர்கள் இந்த பட்டியலில் அடங்குவார்கள். இந்த ஆண்டும் டி.என்.பி.எல் மூலம் பல நட்சத்திர வீரர்கள் அறியப்பட வாய்ப்புள்ளது
டி.என்.பி.எல் ஏலம் 2024
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ஏற்கனவே பல வீரர்களை தக்கவைத்துக் கொண்டதால் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கான இடத்தை நிரப்ப கடந்த ஆண்டைப் போல இம்முறையும் ஏலத்தின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதற்கான ஏலம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி நடந்தது.
இதில், டி.என்.பி.எல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்ற சாதனையை சாய் கிஷோர் மற்றும் சஞ்சய் யாதவ் (ரூ.22 இலட்சம்) படைத்தனர். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற ஏலத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அதிகபட்சமாக 21.60 இலட்சங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனை வாங்கியது.
டி.என்.பி.எல் அணிகள் 2024
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றனர்.
கூடுதல் தகவலாக, இந்த ஆண்டு முதல் திருச்சி கிராண்ட் சோழாஸ் என்ற புதிய பெயரில் புதுப்பொலிவுடன் திருச்சி அணி களமிறங்குகிறது மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் இந்த ஆண்டு முதல் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது
டி.என்.பி.எல் சாம்பியன்கள்
இதுவரை நடந்து முடிந்த 7 சீஸன்களிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற அணிகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அதில் டி.என்.பி.எல்லின் அறிமுக சீஸனில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி முதல் வருட கோப்பையை கைப்பற்றியது.
ஆனால் அதன் பின்னர் 2017, 2019 ,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை 4 முறை கைப்பற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பலம் வாய்ந்த அணியாக இந்த டி.என்.பி.எல்லில் வலம் வருகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் வெற்றியை சுவைக்காத மதுரை அணி 2018ஆம் ஆண்டு சீகம் மதுரை பேந்தர்ஸாக பெயர் மாற்றத்துடன் களமிறங்கி முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
2022ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து லைகா கோவை கிங்ஸ் அணி 6வது சீஸனின் டி.என்.பி.எல் பட்டத்தை பகிர்ந்து கொண்டது. அதன் பின்னர் சென்ற ஆண்டு மீண்டும் 2023ஆம் ஆண்டின் டி.என்.பி.எல் பட்டத்தை தொடர்ச்சியாக 2வது முறை கைப்பற்றி இம்முறை ஹாட்ரிக் பட்டத்தை குறிவைத்து களமிறங்கவுள்ளது
தொலைக்காட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்கள்
டிஜிட்டல் ஒளிபரப்பு: ஃபேன்கோடு (FANCODE)
ஸ்பான்சர் லிஸ்ட்
•டைட்டில் பார்ட்னர் – ஸ்ரீராம் கேபிட்டல்
•ஸ்ட்ரன்த் பார்ட்னர் - ஷரான் பிளை
•டி.ஆர்.எஸ் பார்ட்னர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
•அசோஸியேட் பார்ட்னர் – POOMER(பூமர்) / பிரிட்டிஷ் எம்பயர் (குடிநீர்)
•அசோஸியேட் பார்ட்னர் – ட்ரீம்11 / BOOMER(பூமர்)
•ஆரஞ்சு கேப் பார்ட்னர் - டி.வி.எஸ் ரெய்டர்
•பர்ப்பிள் கேப் பார்ட்னர் - டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி
•இன்ஸ்சூரன்ஸ் பார்ட்னர் – இன்ஸ்சூரன்ஸ்தேகோ
•அம்பயர் பார்ட்னர் – லக்ஷ்மி செராமிக்ஸ்
•குளிர்பான பார்ட்னர் – கேம்பா
•மெடிக்கல் பார்ட்னர்– காவேரி ஹாஸ்பிட்டல்
•எக்ஸ்க்ளூசிவ் டிக்கெட்டிங் பார்ட்னர் – பேடிஎம் இன்சைடர்
•ஒளிபரப்பு பார்ட்னர் – ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1HD,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்
•டிஜிட்டல் Streaming பார்ட்னர் - ஃபேன்கோடு
டி.என்.பி.எல்லின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
இதுவரை டி.என்.பி.எல் தொடர் மூலம் பல சூப்பர் ஸ்டார்கள் உலகளவில் பிரபலமானதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்னும் எண்ணற்ற இளம் வீரர்களும் இதுவரை யாரும் அறியப்படாத பல திறமையாளர்களும் களம் காண்கின்றனர். அந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை பெற்றுத் தர தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒரு மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியிலும் முத்திரைப் பதிக்கும் இளம் சூப்பர் ஸ்டார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தவுள்ளது டி.என்.பி.எல் நிர்வாகம். இந்த மாபெரும் நிகழ்வே “டி.என்.பி.எல்லின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?”
போட்டிக்கான டிக்கெட் விற்பனை
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன், வாழப்பாடி சேலம் மைதானத்தில் ஜூலை 5 முதல் ஜூலை 11 வரையிலான போட்டிகளுக்கு நேரடியாக டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஏற்கனவே ஆன்லைன் டிக்கெட்கள் PAYTM INSIDER மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேரடி டிக்கெட் விற்பனை. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் வாழப்பாடி மற்றும் எஸ்.டி.சி.ஏ அலுவலகம், காந்தி ஸ்டேடியம் (அரசு மருத்துவமனை எதிர்புறம்) ஆகிய இரண்டு நேரடியாக டிக்கெட் விற்பனை தொடங்கியது
டாபிக்ஸ்