ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் தர்மசாலா மேட்ச் இடமாற்றம்.. காரணம் என்ன தெரியுமா?
ஐபிஎல் 2025: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இடங்களை குறிவைத்து ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின. பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் தர்மசாலா மேட்ச் இடமாற்றம்.. காரணம் என்ன தெரியுமா? (IPL)
ஐபிஎல் 2025: ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இடையேயான போட்டி இப்போது அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி மேட்ச்சின் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் கிரிக்கெட் சங்க (ஜி.சி.ஏ) செயலாளர் அனில் படேல் வியாழக்கிழமை இந்துஸ்தான் டைம்ஸிடம் இச்செய்தியை உறுதிப்படுத்தினார்.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
"ஆம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது" என்று ஜிசிஏ செயலாளர் அனில் படேல் கூறினார்.