ஐபிஎல் 2025: அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள்

ஐபிஎல் 2025: அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 23, 2025 06:58 PM IST

ஐபிஎல் 2025 தொடரில் ஒவ்வொரு அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்களும் பிரமிக்க வைக்கும் விதமாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை போன்ற மேலும் சில புள்ளிவிவரங்கள் இந்த சீசனில் முன்னுக்கு வந்துள்ளன. இவை இந்த லீக்கின் தரத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளன.

அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள்
அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள் (AFP)

அதிக கேட்ச்களை விட்ட பீல்டர்கள்

ஐபிஎல் 2025இன் முதல் 40 போட்டிகளில் மொத்தம் 111 கேட்சுகள் தவறவிடப்பட்டுள்ளன. 2020க்குப் பிறகு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​சீசனின் முதல் 40 போட்டிகளில் அதிக கேட்ச்கள் இந்த முறை தான் தவறவிடப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த சீசனின் 40வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று கேட்சுகள் தவறவிடப்பட்டன. இந்த சீசனில் அதிக கேட்ச்களை தவறவிட்ட வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் கலீல் அகமது, டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் முறையே தலா 4 கேட்ச்களை தவறவிட்டுள்ளனர்.

பீல்டிங்கில் சிறந்த மற்றும் மோசமான அணி

கிரிக்பஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஐபிஎல் 2025இல் ஒவ்வொரு நான்கு கேட்ச் வாய்ப்புகளிலும் ஒரு கேட்ச் தவறவிடப்பட்டுள்ளது. 2020 முதல் ஐபிஎல்லில் முதல் 40 போட்டிகளுக்கு பிறகு மிக 75.2% என்ற கேட்சிங் திறனில் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தவிர, மோசமான த்ரோ காரணமாகவும், 247 மிஸ்ஃபீல்டுகளாலும் 172 ரன் அவுட்களும் தவறவிடப்பட்டன.

இந்த இரண்டு எண்களும், கடந்த 2024 சீசனில் இதே கட்டத்துடன் ஒப்பிடும்போது இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் கேட்சுகளைப் பிடிப்பதில் சிறந்த சீசனாக 2023 தொடர் உள்ளது. அந்த சீசனில்முதல் 40 போட்டிகளில் 81.8 சதவீதம் கேட்ச்கள் பிடிக்கப்பட்டது.

சிறந்த பீல்டிங் அணிகளைப் பார்க்கும்போது, ​​மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025இன் சிறந்த ஃபீல்டிங் அணியாக இருந்து வருகிறது. 40 போட்டிகள் வரை, மும்பை 8 போட்டிகளில் 41 கேட்சுகளில், 8 மட்டும் டராப் செய்துள்ளது. அணியின் கேட்சிங் சராசரி 83.6 சதவீதம் ஆகும்.

முதலிடத்தில் சிஎஸ்கே

அதே நேரத்தில், கேட்ச்களில் மோசமான சராசரி கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 27 போட்டிகள் வரை 16 கேட்சுகளை பிடிக்காமல் விட்டுள்ளனர். சிஎஸ்கேவின் சராசரி 62.7 சதவீதமாகும். மோசமான பீல்டிங்கில் சிஎஸ்கேவுக்கு அடுத்தபடியாக டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. தொடரின் 33 போட்டிகள் வரை 15 கேட்சுகளை விட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​கேட்சுகள் தான் மேட்ச்களை வெற்றி பெறுவதற்கான பார்முலா என்ற எண்ணத்தின் மீது டிராப் கேட்ச்கள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. ஐபிஎல் 2025 தொடரில் கேட்ச் செயல்திறன் வெற்றிகளில் 77.8% (56 டிராப்கள்) மற்றும் தோல்விகளில் 73.3% (49 டிராப்கள்) உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டை ஆகி, பின்னர் சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட போட்டியில் 6 கேட்சுகள் கைவிடப்பட்டன, அவற்றில் நான்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் டிராப் செய்யப்பட்டன. இத்தனை கேட்ச்களை தவறவிட்ட போதிலும் டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.