இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்

இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 19, 2025 04:50 PM IST

இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் விதமாக இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் போட்டி நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்
இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்

சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட போட்டி

180 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், பல்வேறு காரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதிருப்பதை கண்டிருப்போம். இதில் பெரும்பாலான போட்டிகள் மழை காரணமாக நிறுத்தப்படுவதென்பது வாடிக்கையான விஷயம் தான்.

ஆனால் வலுவான சூரிய ஒளி காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? புதன்கிழமை கேன்டர்பரியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் கென்ட் ஸ்பிட்ஃபயர்ஸ் vs க்ளுசெஸ்டர்ஷையர் இடையேயான தெற்கு குழு டி20 பிளாஸ்ட் போட்டியின் போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

வீரர்கள் வெயில் தாக்கம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 158 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தும்போது, ​​குளுசெஸ்டர்ஷையர் தொடக்க வீரர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 8:15 மணிக்கு, "சூரிய ஒளி சுளீர் என பேட்ஸ்மேன்களின் கண்களை பதம் பார்க்கும் விதமாக தாக்கிய நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது". இதன் காரணமாக இரு அணி வீரர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

8 நிமிடங்கள் தாமதம்

உண்மையில், பேட்டிங் செய்யும் போது சூரிய ஒளியானது நேரடியாக பேட்ஸ்மேன்களின் கண்களில் விழுந்தது. இதனால் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில், எட்டு நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு இரு அணி வீரர்களும் களத்துக்கு திரும்ப, போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

இதுதொடர்பாக குளூசெஸ்டர்ஷையர் கிரிக்கெட், தனது எக்ஸ் பக்கத்தில் அசாதாரண குறுக்கீட்டை உறுதிப்படுத்தி, "சூரியன் ஆட்டத்தை நிறுத்தியது. மழைக்கு பதிலாக, பேட்ஸ்மேன்களின் கண்களில் சூரிய ஒளி தாக்குதல் நடத்தியது. வீரர்களின் பாதுகாப்புக்காக, இரு அணிகளும் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஸ்கோர் 29/0 [3.2] ஆக உள்ளது." என பதிவிட்டது.

சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட போட்டிகள்

குளூசெஸ்டர்ஷையர் அணி 18.2 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது, கேப்டன் ஜாக் டெய்லர் அற்புதமான அரைசதம் அடித்தார். டெய்லர் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார், அவருக்கு ஆலிவர் பிரைஸ் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இருப்பினும், கிரிக்கெட் வரலாற்றில் சூரிய ஒளி காரணமாக ஒரு போட்டி நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க்கில் இதேபோன்ற குறுக்கீடு காணப்பட்டது. அப்போது சூரிய ஒளி பேட்ஸ்மேன்கள் பந்தைப் பார்ப்பதை கடினமாக்கியது.

அப்போது நியூசிலாந்து அணி சூரிய அஸ்தமனம் வரை ஆட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தங்கள் இன்னிங்ஸைத் தொடங்கியது. முன்னதாக, 2019 ஜனவரியில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின் போது இதே மைதானத்தில் இதேபோன்ற குறுக்கீடு காணப்பட்டது.