ஐபிஎல் 2025: ஆர்சிபி போல் நிம்மதி வேறெங்கும் இல்லை.. மகிழ்ச்சியாக இருக்கவே கேப்டன்சியில் இருந்து விலகினேன் - கோலி பேச்சு
ஐபிஎல் போட்டிகளில் நங்கூர இன்னிங்ஸ் மூலம் அணிக்கு உறுதியான வெற்றியை பதிவு செய்து வரும் கோலி, கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தது பற்றியும், பேட்டிங்கில் தனது அணுகுமுறையில் புதிய கண்ணோட்டத்தைக் கண்டுபிடிப்பது பற்றி ஆர்சிபி பாட்காஸ்டில் பேசியுள்ளார்.

டி20 போட்டியும், அதில் பேட்ஸ்மேன்களின் ஆட்டமும், அணுகுமுறையும் புதிதாக பரிணமித்திருந்தாலும், ஸ்டார் பேட்ஸ்மேனான விராட் கோலி தனது தரநிலையில் நிலைத்து இருக்கிறார். ஆட்டத்துக்கு ஏற்ப பேட்டிங்கில் நெகிழ்வுதன்மை ஏற்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் சீசன்களில் அதிக எண்ணிக்கையிலான 500+ ரன்களுடன் அவர் சாதனை படைத்துள்ளார். ஆனால் இந்த வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், ஆட்டத்துக்கு பொருத்தமாக மாற்றும் விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. பவர்பிளேயில் பந்தைத் தாக்குவது அல்லது நங்கூரமாக விளையாடுவது எதுவாக இருந்தாலும், சூழ்நிலை தன்னை மூழ்கடிக்க விடாமல் பார்த்து கொள்வதில் விராட் கோலி கவனமுடன் செயல்படுகிறார்.
'போல்ட் அண்ட் பியாண்ட்' என்ற ஆர்சிபி பாட்கேஸ்டில் பேசிய விராட் கோலி, டி20 போட்டிகளில் தனது பேட்டிங் அணுகுமுறை பற்றியும், கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றியும் பேசினார்.