ஐபிஎல் 2025: அதிக முறை 400 ரன்கள் அடித்த கேப்டன்கள்.. கோலியை நெருங்கிய ஷ்ரேயாஸ்! ரோஹித்தை வீழ்த்தி சாதனை
ஐபிஎல்லின் ஒரு சீசனில் கேப்டனாக 400 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்த குறுகிய காலகட்டத்தில், இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார். மூன்று அணிகளுக்குத் தலைமை தாங்கிய சில வீரர்களில் இவரும் ஒருவர். அதே நேரத்தில் ஐபிஎல் இறுதி போட்டிக்கு இரண்டு அணிகளை அழைத்து சென்ற ஒரே கேப்டனாகவும் திகழ்கிறார். இது தவிர அவர் கேப்டனாக பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனையாளர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி வருகிறார். அந்த வகையில் தற்போது ஐபிஎல் கேப்டன்கள் நிகழ்த்திய சாதனைகளில் சிறந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
முதலிடத்தில் விராட் கோலி
ஐபிஎல்லில் கேப்டனாக இருக்கும்போது ஒரு சீசனில் அதிக முறை 400 ரன்கள் எடுத்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களை ஷ்ரேயாஸ் ஐயர் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி வைத்துள்ளார். அவர் ஐபிஎல் சீசன்களில் ஏழு முறை கேப்டனாக 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.