டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்"
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்"

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்"

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 07, 2025 07:59 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன் இந்திய அணிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்"
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்" (AP)

38 வயதான ரோஹித் ஷர்மா, இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களுடன் 40.57 சராசரியுடன் 4301 ரன்கள் எடுத்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை ரோஹித் ஷர்மா வழிநடத்தினார். அத்துடன், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசியாக கேப்டனாக செயல்பட்டார்.

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருப்பது குறித்து ரோஹித் ஷர்மா இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "எனது நாட்டை வெள்ளை நிற உடையில் பிரதிநிதித்துவப்படுத்தியதை முழுமையான மரியாதையாக கருதினேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு நீங்கள் கொடுத்த உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Rohit Sharma's Instagram Story
Rohit Sharma's Instagram Story

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மாவை நீக்க, அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ சீனியர் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரோஹித்தின் மோசமான பார்ம்

இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டனாக தொடர வாய்ப்புள்ள ரோஹித், ஒரு சிறப்பு பேட்ஸ்மேனாக அணியின் ஒரு பகுதியாக இங்கிலாந்து செல்லக்கூடும் என தெரிகிறது. ஆனால் அவரது சமீபத்திய சிவப்பு பந்து கிரிக்கெட் ஃபார்மின் அடிப்படையில் அவரை கேப்டனாக வைத்திருக்க தேர்வாளர்கள் தயாராக இல்லை என தெரிகிறது.

நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில், 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது. இதன் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் அந்நிய மண் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றது. ரோஹித்தின் கேப்டன்சியில் இந்தியா கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருந்த ரோஹித், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில், ஆடும் லெவனில் இருந்து விலகினார். அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

அறிக்கையின்படி, தேர்வாளர்கள் ஏற்கனவே பிசிசிஐக்கு ரோஹித்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மூத்த வாரிய அதிகாரிகள் இந்த முடிவை ஏற்க முடிவு செய்துள்ளனராம்.

எதிர்கால டெஸ்ட் அணியை உருவாக்க தேர்வாளர்கள் தொடர்ச்சியான கூட்டங்களை மும்பையில் நடத்தினர், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் ஒரு பாட்காஸ்டில் ரோஹித் தானே இங்கிலாந்தில் இந்தியாவை வழிநடத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே தேர்வுக் குழுவாக இருந்த அகர்கர் மற்றும் அவரது குழுவினர், எதிர்காலத்துக்காக ஒரு சரியான தலைவரை தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின

“தேர்வுக் குழுவினரின் சிந்தனை செயல்முறை தெளிவாக உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு அவர்கள் ஒரு புதிய தலைவரை விரும்புகிறார்கள், குறிப்பாக ரோஹித்தின் சிவப்பு பந்து ஃபார்மைக் கருத்தில் கொண்டு, அவர் கேப்டன்சிக்கு பொருந்தவில்லை. அடுத்த டெஸ்ட் சுழற்சிக்கு ஒரு இளம் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். மேலும் ரோஹித் அணியை வழிநடத்த மாட்டார் என்று தேர்வுக் குழு பிசிசிஐக்கு தெரிவித்துள்ளதாக” ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின

அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக இருப்பதால் அவர் வெளிப்படையான தேர்வாக இருக்கிறார், ஆனால் அவரது உடற்தகுதி மற்றும் பணிச்சுமை மேலாண்மை ஒரு பிரச்னையாக மாறக்கூடும். இந்தியா அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் ஒரு கேப்டனையே விரும்பும்.

ஆஸ்திரேலியாவில் பும்ரா விதிவிலக்கான தலைமைத்துவ திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரை முழுநேர கேப்டனாக நியமிப்பது சிறந்த தேர்வாக இருக்காது.

எனவே இந்தியா டெல்ட் கேப்டன்களில் உள்ள மற்ற விருப்பங்களாக சுப்மான் கில், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளார்கள். இந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த மூன்று பேரில், ராகுல் மட்டுமே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.