டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்"
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன் இந்திய அணிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்.. "ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்" (AP)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் வைரலான சில நிமிடங்களுக்குப் பிறகு, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
38 வயதான ரோஹித் ஷர்மா, இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களுடன் 40.57 சராசரியுடன் 4301 ரன்கள் எடுத்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை ரோஹித் ஷர்மா வழிநடத்தினார். அத்துடன், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசியாக கேப்டனாக செயல்பட்டார்.