ஐபிஎல் 2025: சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு

ஐபிஎல் 2025: சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 31, 2025 04:12 PM IST

ஐபிஎல் 2025: மோசமான பீல்டிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு
சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு (PTI)

இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. மோசமான பீல்டிங் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்திருப்பதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தில், இரு அணிகளும் களத்தில் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பீல்டிங்கில் சிறந்து விளங்கிய ராஜஸ்தான் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டது. ஆனால், சிஎஸ்கே அணி அதை செய்ய தவறியது எனவும் ராயுடு தெரிவித்துள்ளார்.

வாய்ப்புகளை பயன்படுத்திய ராஜஸ்தான்

இதுதொடர்பாக அம்பத்தி ராயுடு ஜியோஸ்டாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நெருக்கமான ஆட்டத்தை விளையாடும்போது, ​​ஒவ்வொரு சதவீதமும் முக்கியமாகும். இந்தப் போட்டியில் சில நம்பமுடியாத கேட்சுகளைப் பார்த்தோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக ஃபீல்டிங் செய்யவில்லை. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் உண்மையிலேயே பீல்டிங்கில் சிறந்து இருந்தது. ஃபீல்டிங் என்பது இளம் அணியைக் கொண்டிருப்பது மட்டுமல்ல. அது எதிர்பார்ப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றியது என்பதைக் காட்டுகிறது. ஷிவம் துபே தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தபோது, ரியான் பராக் எடுத்த கேட்ச், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

பீல்டிங்கில் மோசம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருபோதும் ஃபீல்டிங்குக்கு பெயர் பெற்ற அணியாக இருந்ததில்லை. ஆரம்ப ஆண்டுகளில் சில இளம் வீரர்களால் சிறந்த பீல்டிங்கை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே பீல்டிங் முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் மோசமாக இருந்தது. எளிதான வாய்ப்புகளை தவறவிடுவது மற்றும் பவுண்டரி அருகே தடுமாறுவது என இருந்துள்ளது. இவை அணியினர் விரைவாக சரிசெய்ய வேண்டிய விஷயங்கள். சிஎஸ்கேவின் இந்த தவறுகளைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது" என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறுகிறது.

2010 முதல் 2023 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் அம்பத்தி ராயுடு. 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருக்கும் ராயுடு, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதேபோல் 2018 முதல் 2023 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ராயுடு, சிஎஸ்கே அணிக்காகவும் மூன்று முறை சாம்பியன் ஆகியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரராக இருந்து வருகிறார் ராயுடு.