ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் செல்ல நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பிரசித் கிருஷ்ணா பேச்சு
ஒவ்வொரு போட்டியிலும் குழுவாக சிறப்பாக விளையாடுவது முக்கியம், அதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று குஜராத் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளரும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருப்பவருமான ப்ரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரஸ் ரூமில் 'ரேஸ் டு பிளேஆஃப்ஸ்' நிகழ்வின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மற்றும் தற்போது பர்பிள் கேப் வைத்திருப்பவருமான பிரசித் கிருஷ்ணா பேசினார். அப்போது, "விக்கெட்டுகள் விளையாட்டின் ஓர் அங்கம் தான். நன்றாக பந்து வீசுவதே முக்கியம். முதல் போட்டியில் எங்கள் திட்டங்கள் சரியாக இருந்தன. ஆனால் செயல்பாட்டில் சிறிது தவறுகள் ஏற்பட்டன. அதன் பிறகு, அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, திறன்களை மேம்படுத்தி, சிறப்பாக செயல்படுத்துவது மீது கவனம் செலுத்தினோம்.
ஆஷிஷ் நெக்ரா உதவினார்
நான் எனது திட்டத்தில் எதையும் மாற்றவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை நெஹ்ரா தெளிவுபடுத்தினார். அதற்கு உரிய நேரத்தை செலவழித்து சரியான பயிற்சி எடுத்தேன். அவருடனான சரியான உரையாடல்கள் நடத்தினேன். அவர் எனக்குக் கற்றுத்தந்த முக்கியமான விஷயம், நிலைமைகளை சரியாக வாசித்து, ரன்-அப்பின் தொடக்கத்தில் அறிவாலான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்வது. இது நம்பிக்கையை வளர்த்து எடுத்தது.
நிலைத்தன்மை முக்கியம்
ஒவ்வொரு போட்டியிலும் குழுவாக சிறப்பாக விளையாடுவது மிகவும் அவசியம். எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும், ஒரு போட்டியில் மொமென்டம் மாறிவிடும். அதனால் எப்போதும் பணிவுடன் இருந்து, கடினமாக உழைத்து, ஒவ்வொரு போட்டிக்கும் முழு தயாரிப்புடன் இறங்குகிறோம். எனவே நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது
நாம் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க வேண்டும், பொறுப்புடன் செயல்பட வேண்டும், மைதானத்தில் புத்திசாலியான முடிவுகளை எடுக்க வேண்டும், மேலும் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். இதுவே எங்களுடைய வழிகாட்டும் கொள்கை. இதை சீசன் முழுவதும் பின்பற்றுவோம்
இந்த சீசனில் பந்துவீச்சாளர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சீசனில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீசனில் அனைவரும் சிறப்பாக தயாராகி உள்ளனர்.
இந்த முறை பந்துவீச்சாளர்களே மேலோங்குகின்றனர், ஸ்கோர்கள் அதிகமாக இல்லை. இந்த சீசனின் பாதி முடிந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் எதுவும் நடக்கலாம். பந்துவீச்சாளர்களின் பெரும்பங்குக்கு அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்." இவ்வாறு பிரசித் கிருஷ்ணா பேசினார்.
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ல்
இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருந்து வருகிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்னஸ் தனது அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 28, 2025 அன்று மாலை 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஜெயப்பூரில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டர் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரலைவில் காண தவறவிடாதீர்கள்

டாபிக்ஸ்