ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் செல்ல நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பிரசித் கிருஷ்ணா பேச்சு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் செல்ல நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பிரசித் கிருஷ்ணா பேச்சு

ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் செல்ல நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பிரசித் கிருஷ்ணா பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 27, 2025 08:58 PM IST

ஒவ்வொரு போட்டியிலும் குழுவாக சிறப்பாக விளையாடுவது முக்கியம், அதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று குஜராத் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளரும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருப்பவருமான ப்ரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.

நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பர்பிள் தொப்பி வைத்திருக்கும் பிரசித் கிருஷ்ணா பேச்சு
நிலைத்தன்மை, குழுவாக விளையாடுவது முக்கியம்.. பர்பிள் தொப்பி வைத்திருக்கும் பிரசித் கிருஷ்ணா பேச்சு

ஆஷிஷ் நெக்ரா உதவினார்

நான் எனது திட்டத்தில் எதையும் மாற்றவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை நெஹ்ரா தெளிவுபடுத்தினார். அதற்கு உரிய நேரத்தை செலவழித்து சரியான பயிற்சி எடுத்தேன். அவருடனான சரியான உரையாடல்கள் நடத்தினேன். அவர் எனக்குக் கற்றுத்தந்த முக்கியமான விஷயம், நிலைமைகளை சரியாக வாசித்து, ரன்-அப்பின் தொடக்கத்தில் அறிவாலான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்வது. இது நம்பிக்கையை வளர்த்து எடுத்தது.

நிலைத்தன்மை முக்கியம்

ஒவ்வொரு போட்டியிலும் குழுவாக சிறப்பாக விளையாடுவது மிகவும் அவசியம். எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும், ஒரு போட்டியில் மொமென்டம் மாறிவிடும். அதனால் எப்போதும் பணிவுடன் இருந்து, கடினமாக உழைத்து, ஒவ்வொரு போட்டிக்கும் முழு தயாரிப்புடன் இறங்குகிறோம். எனவே நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது

நாம் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க வேண்டும், பொறுப்புடன் செயல்பட வேண்டும், மைதானத்தில் புத்திசாலியான முடிவுகளை எடுக்க வேண்டும், மேலும் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். இதுவே எங்களுடைய வழிகாட்டும் கொள்கை. இதை சீசன் முழுவதும் பின்பற்றுவோம்

இந்த சீசனில் பந்துவீச்சாளர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சீசனில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீசனில் அனைவரும் சிறப்பாக தயாராகி உள்ளனர்.

இந்த முறை பந்துவீச்சாளர்களே மேலோங்குகின்றனர், ஸ்கோர்கள் அதிகமாக இல்லை. இந்த சீசனின் பாதி முடிந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் எதுவும் நடக்கலாம். பந்துவீச்சாளர்களின் பெரும்பங்குக்கு அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்." இவ்வாறு பிரசித் கிருஷ்ணா பேசினார்.

ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ல்

இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருந்து வருகிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்னஸ் தனது அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 28, 2025 அன்று மாலை 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஜெயப்பூரில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டர் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரலைவில் காண தவறவிடாதீர்கள்

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.